Published : 06 Jun 2025 05:48 AM
Last Updated : 06 Jun 2025 05:48 AM
சென்னை: பொதுமக்கள் கருத்து கேட்புக்கு பின் கு எரிஉலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை, வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
டோக்கியோவில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-ம் மேற்பட்ட ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்தின் அருகில் செயல்படுகிறது. கொடுங்கையூரில் எரிஉலை அமைக்கும் திட்ட பணிகள், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் மேற்கொள்ளப்படும்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT