Published : 06 Jun 2025 05:43 AM
Last Updated : 06 Jun 2025 05:43 AM

மறுசீரமைப்பு பணிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் 1, 2-வது நடைமேடைகள் மூடல்

சென்னை: சென்னை: தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலை​யம் இருக்​கிறது. இந்த ரயில் நிலை​யத்தை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​தது. அதன்​படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடி​யில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கியது. முதலில் அடித்​தளம் அமைக்​கும் பணி முடிந்​தது.

இதையடுத்​து, காந்தி இர்​வின் சாலை பக்​கத்​தில் எழும்​பூர் ரயில் நிலை​யத்தை ஒட்டி பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைக்​கும் பணி​ முழு​வீச்​சில் நடை​பெறுகிறது. இதற்​கிடை​யில், ரயில் நிலை​யத்​தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை அனைத்​தை​யும் இணைக்​கும் வித​மாக, நடைமேம்​பாலம் அமைப்​ப​தற்​கான ஆரம்​ப பணி​ தொடங்​கி​யுள்​ளது. இதற்​காக, ரயில் நிலையத்​தின் முதல், 2-வது நடைமேடைகள் நேற்று முதல் மூடப்​பட்​டுள்​ளன. அடுத்த 15 நாட்​களுக்கு பிறகு 3, 4 வது நடைமேடைகளை மூட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் நிலை​யத்​தின் நடைமேடைகளை இணைக்​கும் வகை​யில், ஒரு பிரம்​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்​கப்பட உள்​ளது. தற்​போது, அடித்​தளம் அமைக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. 1,2 ஆகிய நடைமேடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

இதன் காரண​மாக, புதுச்​சேரி மெமு பாசஞ்​சர் ரயில் கடற்​கரை ரயில் நிலை​யத்​திலிருந்து புறப்​பட்​டு, வந்​தடை​யும் வகை​யில் அட்​ட​வணை மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதுத​விர படிப்​படி​யாக ரயில் நடைமேடைகள் மூடப்பட உள்​ளன. நடைமேடைகள் மூடப்​பட​வுள்​ள​தால், சுமார் 10 விரைவு ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் இருக்க வாய்ப்பு உள்​ளது. இது தொடர்​பான அறி​விப்பு விரை​வில் வரும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x