தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே: மக்கள் அதிர்ச்சி

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே: மக்கள் அதிர்ச்சி
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் புதிய, இரட்டை பாதை என 9 திட்​டங்​களுக்கு மத்​திய பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்​பி​யுள்​ளது. இது, மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பட்​ஜெட்டில் தமிழகத்​தில் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதன்படி, தெற்கு ரயில்​வே​யில் தமிழகம், கேரளத்​தில் நடை​பெறும் 12 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.727.79 கோடி நிதியை பல்​வேறு காரணங்​களை முன்​வைத்து தெற்கு ரயில்வே திருப்பி அனுப்​பி​யுள்​ளது.

இதில் தமிழகத்​தில் நடை​பெறும் 9 திட்​டங்​களுக்கு ஒதுக்​கிய நிதி​யும் அடங்​கும். 3 இரட்​டை, அகலப் பாதை திட்​டத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.400 கோடி, 6 புதிய பாதை திட்​டத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.247 கோடி நிதி​யும் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளன. இது​போல, கேரளா​வில் 3 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நிதி​யை​யும் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளது. திண்​டிவனம் - திரு​வண்​ணா​மலை (வழி:செஞ்​சி), அத்​திப்​பட்​டு- புதூர் ஆகிய 2 புதிய ரயில் பாதை திட்​டங்​கள் ஏற்​கெனவே நிறுத்தி வைக்​கப்​பட்​டன.

இதுத​விர, மதுரை - தூத்​துக்​குடி (வழி: அருப்​புக்​கோட்​டை) ராமேசுவரம் - தனுஷ்கோடி ஆகிய இரண்டு புதிய ரயில் பாதை திட்​டங்​கள் நிறுத்தி வைப்​ப​தற்​கான பரிந்​துரை ஏற்​கெனவே அனுப்​பட்​டுள்​ளன. மேலும், ஈரோடு - பழநி திட்​டம், சென்னை - கடலூர் (வழி: மகாபலிபுரம்) திட்​டத்தை நிறுத்தி வைக்க தற்​போது பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இதுத​விர, பெரும்​புதூர் - கூடு​வாஞ்​சேரி- இருங்​காட்​டு​கோட்டை திட்​டத்தை புதி​ய​பாதை திட்​டத்​தில் இருந்து நீக்​கி, சர்​வேக்கு நகர்த்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுத​விர, 3 புதிய பாதை திட்​டங்​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இவற்​றில் காரைக்​கால் துறை​முகம் - பேரளம் வரை சரக்​கு​பாதை திட்​ட​மும், திண்​டிவனம் - நகரி திட்​டம், மொரப்​பூர் - தரு​மபுரி திட்​டம் ஆகிய திட்​டங்​களும் பயணி​கள் பயன்​பாட்​டுக்​கும் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மற்ற திட்​டங்​கள் கைவிடப்​படும் நிலை உரு​வாகிறது. இரட்டை பாதை திட்​டத்தை பொருத்​தவரை, சேலம் - திண்​டுக்​கல் (வழி: கரூர்) திட்​டம், கரூர் - ஈரோடு திட்​டம், விழுப்​புரம் - காட்​பாடி திட்​டம் ஆகிய திட்​டங்​களுக்கு விரி​வான திட்ட அறிக்கை கிடைக்​காத​தால், இந்த 3 திட்​டங்​களுக்கு திட்​டநிதி ரூ.400 கோடி திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 872 கி.மீ. தொலை​வுக்கு 10 புதிய பாதை திட்​டங்​கள் நடை​பெற்று வந்​தன. கடந்த நிதி​யாண்டு தொடக்​கத்​தில் புதி​ய​பாதை திட்​டங்​களுக்கு ரூ.13,646 கோடி நிதி தேவைப்​பட்​டது. அதே​நேரத்​தில், நடப்பு மத்​திய பட்​ஜெட்​டில் புதிய பாதை திட்​டத்​துக்கு மட்​டும் ரூ.617 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. பல்​வேறு ரயில்வே திட்​டங்​கள் நிறைவேற்​றப்​படும் நிலை​யில், கடந்த 10 ஆண்​டு​களில் மீளவட்​டம் - மேலாமருதூர், வாலாஜா சாலை - ராணிபேட்டை என மொத்​தம் 24 கி.மீ. புதிய பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அன்​புமணி கண்டனம்: தமிழக ரயில் திட்​டங்​களுக்​காக ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட நிதி ரூ.728 கோடியை திருப்பி அனுப்​பியது தமிழகத்​துக்கு தெற்கு ரயில்வே நிர்​வாகம் செய்​யும் துரோகம் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். மத்​திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்​டும். திட்ட செல​வில் ஒரு பகு​தியை ஏற்க வேண்​டும். ஆண்​டுதோறும் எவ்​வளவு நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படும் என்​பது குறித்த விவரங்​கள் அடங்​கிய கால அட்​ட​வணையை ரயில்​வே வெளி​யிட வேண்​டும் என்றும் தெரிவித்துள்ளார்​.

அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் தெற்கு ரயில்வே உறுதி: தமிழகத்தில் குறிப்பிட்ட சில ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் தெரிவித்துள்ளது. அதன்விவரம்: தனிப்பட்ட திட்டங்களில் நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு ஒரு மாறும் செயல்முறையாகும், மேலும் பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் பல்வேறு காலாண்டுகளில் மாறுபடும். ஒவ்வொரு கட்டமாக நிதி வெளியிடுவது, திட்டத்தின் நிலவரப்படி நிலவும் முன்னேற்றம் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலாண்டில் பணத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தின் திறன் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது.

மேலும் பொருந்தாத தன்மை இருக்கும்போது, ​​பயன்படுத்தப்படாத நிதிகள் அதிக நிதி தேவைப்படும் திட்டங்களுக்கு மாற்றப்படும். தமிழகம் மற்றும் கேரளாவில் சில திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. அதாவது இறுதி இருப்பிட சர்வே மற்றும் இறுதி பாதை சீரமைப்பு, விரிவான திட்ட அறிக்கை இறுதி நிலை, மாநில அரசின் உதவியுடன் நிலம் கையகப்படுத்துதல் நிறைவு, பணிகளை நிறைவேற்றுவதற்கான நிறுவனங்களை நிர்ணயிப்பதற்கான டெண்டர் செயல்முறை நிறைவு ஆகியவை பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன.

ரயில்வே மண்டலம் மற்றும் ரயில்வே வாரியத்துக்கு இடையேயான நிதி ஓட்டம் என்பது ஒரு உள் மாறும் செயல்முறையாகும். இது தேசிய வளங்களை திறம்பட பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தெற்கு ரயில்வே தேவைப்படும் போது திட்டங்களுக்கு அதிகபட்ச நிதியைப் பெறுகிறது. எனவே, தெற்கு ரயில்வேயில் தமிழகம் மற்றும் கேரளாவில் அனுமதிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற உறுதிபூண்டு இருக்கிறோம். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரி
வித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in