Published : 07 Jul 2018 10:35 AM
Last Updated : 07 Jul 2018 10:35 AM

மணல் கடத்தல் புகார் தர சென்றவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

செங்குன்றம் அருகே இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநிலச் செயலாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மீஞ்சூர் அருகே உள்ள புங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் காளிகுமார்(34). இவர், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். அவரது நண்பர் ஞானசேகர்(30) மீஞ்சூர் நகரச் செயலாளராக உள்ளார்.

இவர்கள் மீஞ்சூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க நேற்று காரில் மீஞ்சூரில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்டச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. உடனே காளிகுமாரும், ஞானசேகரும் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினர்.

செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முழுவதும் எரிந்து நாசமானது.

திருவள்ளூர் எஸ்பி சிபிசக்ரவர்த்தி, பொன்னேரி டிஎஸ்பி ராஜா, சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். சோழவரம் போலீ ஸார் மர்ம நபர்களை தீவிர மாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x