Published : 23 May 2025 05:12 AM
Last Updated : 23 May 2025 05:12 AM

மத மோதலைத் தூண்​டும் வகை​யில் பேசி​ய​தாக ஹெச்.ராஜா உட்பட 4 பேர் மீது வழக்கு

திருவாரூர்: மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, ஹெச்.ராஜா உட்பட 4 பேர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மே 17-ம் தேதி வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை ஆதரித்தும், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தும் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம், சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் சையது இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.

அப்போது, அவர்கள் மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக 4 பிரிவுகளின் கீழ் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x