கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள்; டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் 6 மணி நேரம் அமலாக்​கத் துறை​ விசாரணை - பின்னணி என்ன?

சென்னையில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். (அடுத்த படம்) வீட்டின் அருகே கிழித்து வீசப்பட்ட ஆவணங்களை சேகரித்த அதிகாரிகள்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். (அடுத்த படம்) வீட்டின் அருகே கிழித்து வீசப்பட்ட ஆவணங்களை சேகரித்த அதிகாரிகள்.
Updated on
2 min read

சென்னை: டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலை​யில் கிடந்த சில ஆவணங்​களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடப்​ப​தாக​வும், இதில் வரி ஏய்ப்​பு, சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக​வும் அமலாக்​கத் துறைக்கு புகார்​கள் சென்​றன. இதன் அடிப்​படை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் நிறுவன தலைமை அலு​வல​கம், அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள டாஸ்​மாக் குடோன், அப்​போது அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி​யின் நண்​பர் வீடு, அலு​வல​கங்​கள், திமுக எம்​.பி.ஜெகத்​ரட்​சக​னின் அக்​கார்டு மது​பான உற்​பத்தி நிறு​வனம், எஸ்​என்​ஜே,கால்​ஸ், எம்​ஜிஎம் உள்​ளிட்ட மது​பான உற்​பத்தி நிறு​வனங்​கள், அதன் ஆலைகளில் அமலாக்​கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்​தி​யது.

சென்​னை, கரூர், கோவை, விழுப்​புரம், புதுக்​கோட்டை என 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு மது​பானங்​கள் கொள்​முதல் செய்​தது, பார் உரிமம் வழங்​கியது, மது​பானங்​களை மது​பான கடைகளுக்கு கொண்டு செல்​வதற்​கான போக்​கு​வரத்​துக்கு டெண்​டர் வழங்​கியது உள்​ளிட்​ட​வற்​றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்துறை அறிக்கை வெளி​யிட்​டது.

இதையடுத்து, அமலாக்​கத்துறை சோதனை நடத்​தி​யது சட்​ட​விரோதம் என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் நிர்​வாகம் சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​ததால், உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்​முறை​யீடு செய்​துள்ளது.

இந்த சூழலில், சென்னை மணப்​பாக்​கம் சி.ஆர்​.புரத்​தில் உள்ள டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநர் விசாகன் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். அப்​போது, ரூ.1,000 கோடி முறை​கேடு தொடர்​பான பல முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றிய​தாக கூறப்​படு​கிறது. அதுதொடர்​பாக விசாக​னிட​மும், அவரது மனை​வி, மகனிட​மும் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

6 மணி நேரம் விசாரணை: அப்​போது, விசாகன் வீடு அருகே கிழித்து வீசப்பட்ட நிலையில் சில ஆவணங்கள் கிடந்​துள்​ளன. முக்கியமான வாட்​ஸ்​அப் உரை​யாடல்​கள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்​றி​யும் அவரிடம் தீவிர விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். இந்த சோதனை சுமார் 6 மணி நேரத்​துக்கு மேல் நீடித்த நிலை​யில், விசாகன் மற்​றும் அவரது மனை​வியை அமலாக்​கத் துறை அலு​வல​கத்​துக்கு காரில் அழைத்து சென்​றனர். சிறிது நேரம் விசா​ரித்த பிறகு, அவரது மனை​வியை அதி​காரி​கள் அனுப்​பி​விட்​டனர்.

விசாக​னிடம் தொடர்ந்து விசா​ரணை நடந்​தது. அவரது வீட்​டில் கைப்​பற்​றிய ஆவணங்​கள், கிழித்து வீசப்​பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் தொடர்ந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இதே​போல, சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசிக்​கும் பிரபல திரைப்பட தயாரிப்​பாளர் டான் பிக்​சர்ஸ் ஆகாஷ் பாஸ்​கரன் வீட்​டிலும் அமலாக்​கத்​ துறை அதி​காரி​கள் நேற்று காலை முதல்சோதனை நடத்​தினர். இவர் பள்​ளிக்​கல்வி துறை அமைச்​சர் அன்​பில் மகேஸின் உறவினர் என்று கூறப்​படு​கிறது.

திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள தொழில​திபர் தேவகு​மார், சாஸ்​திரி நகரில் உள்ள மின்​வாரிய ஒப்​பந்​த​தா​ரர் ராஜேஷ்கு​மார், சேத்​துப்​பட்டு ஜெக​நாத​புரத்​தில் உள்ள பாபு, தியாக​ராய நகரில் உள்ள கேசவன் ஆகியோரது வீடு​கள், சூளைமேடு ராஜகீழ வீதி​யில் உள்ள எஸ்​என்ஜே மது​பான நிறுவன அலு​வல​கம் உட்பட சென்​னை​யில் நேற்று ஒரே நாளில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். குறிப்​பாக, டாஸ்​மாக் தொடர்​பான அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள், அவர்​களுக்கு நெருக்​க​மானவர்​களின் வீடு, அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. இதில், டாஸ்​மாக்​கில் நடந்​துள்​ள​தாக கூறப்​படும் ரூ.1,000 கோடி முறை​கேடு தொடர்​பான பல்​வேறு ஆவணங்​கள், சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை தொடர்​பான ஆவணங்​கள், டிஜிட்​டல் ஆவணங்​கள் சிக்​கிய​தாக கூறப்​படு​கிறது. எனினும், சோதனை முடிந்த பிறகே முழு விவரங்​களை வெளி​யிட முடி​யும்​ என்​று அமலாக்​கத்​ துறை அதி​காரிகள்​ தெரிவித்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in