Published : 15 May 2025 06:20 AM
Last Updated : 15 May 2025 06:20 AM

அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிருக்கு உதவி மையம்: மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்

தாம்பரம் அருகே ஊன​மாஞ்​சேரியில் உள்ள தமிழ்நாடு உயர் காவல் பயிற்சியகத்தில் காவல்துறையில் பெண்கள் 11-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்-க்கு சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் டிஜிபிக்கள் சந்தீப்ராய் ரத்தோர், சீமா அகர்வால் உட்பட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். | படம்: எம்.முத்துகணேஷ் |

வண்டலூர்: ​காவல் துறை​யில் பெண்​கள் என்ற தலைப்​பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்​டலூர் அருகே ஊன​மாஞ்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நேற்று தொடங்​கியது மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார். இன்று நடக்​கும் மாநாட்டு நிறைவு விழா​வில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொள்​கிறார்.

பெண் காவலர்​களை கவுரவிக்​கும் வகை​யில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்​கியது செங்​கல்​பட்டு மாவட்​டம், வண்​டலூர் அருகே உள்ள ஊன​மாஞ்​சேரி​யில் அமைந்​துள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நடந்​தது. மாநாட்டின் கருப்​பொருள் ‘பெண் காவல்​துறை மற்​றும் அதி​காரமளித்​தல்’ என்ற கரும்​பொருளு​டன் நடை​பெற்ற மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர் பேசி​யது:- தமிழகத்​தில் காவல்​துறை​யில் பெண்​களை முதன்​முதலாக தமிழ்​நாடு அறி​முகப்​படுத்​தி​யது. பெண்​களை காவல் துறை​யில் சேர்த்து 50 ஆண்​டு​கள் கடந்து விட்​டது. மாநாட்​டில் இருந்து எழும் பரிந்​துரைகளுக்கு ஏற்ப அனைத்து மாநிலங்​களும் செயல்பட வேண்​டும்.

காவல்​துறை​யில் பெண்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிப்​ப​தால் காவல்​துறை பற்​றிய பொது​மக்​களின் பார்​வையை மாற்​று​வதோடு மட்​டுமல்​லாமல், காவல்​துறையின் செயல்​பாடு​களும் மேம்படும். பெண் காவலர்​களுக்கு அவர்​களின் பணி​யிடத்​தில் அடிப்​படை வசதி​கள் வழங்​கப்பட வேண்​டும். காவல் பணி​யிலும், குடும்​பத்​தி​லும் பெண்​கள் முக்​கிய பங்கு வகிக்​கின்​றனர். நாட்​டில் உள்ள அனைத்து காவல் நிலை​யங்​களி​லும் பெண்​களுக்கு என தனி​யாக உதவி மையம் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது இவ்​வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்​சி​யில் தமிழக காவல்​துறை இயக்​குநர் சங்​கர் ஜிவால், காவல் ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டு பணி​யகத்​தின் (BPR&D) இயக்​குநர் ராஜீவ் குமார் ஷர்​மா, தமிழ்நாடு காவல் உயர்​ப​யிற்​சி​யகத்​தின் இயக்​குநர் டாக்​டர் சந்​தீப் ராய் ரத்​தோர், பொருளா​தார குற்​றப் பிரிவு, கூடு​தல் இயக்​குநர் பால நாகதேவி உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர். இறு​தி​யில் இணை அமைச்​சர் தேசிய மாநாட்​டின் கண்​காட்​சியை தொடங்கி வைத்​தார்.

இன்று நிறைவு விழா​: தமிழ்​நாட்​டில் உள்ள சுமார் 140 மகளிர் காவல் அதி​காரிகளும் இந்த ​மா​நாட்​டில்​ கலந்​து கொண்​டனர்​. இன்​று நடக்​கும்​ ​மா​நாட்​டு நிறைவு விழா​வில்​ தமிழக துணை முதல்​வர்​ உதயநி​தி ஸ்​டா​லின்​ கலந்​து கொள்​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x