Published : 15 May 2025 06:30 AM
Last Updated : 15 May 2025 06:30 AM

தமிழ் சினிமா உலகில் பொன்விழா ஆண்டு: இளையராஜாவுக்கு அமைச்சர் சாமிநாதன் வாழ்த்து

சென்னை: தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்​டு​கள் ஆவதையொட்டி இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் வாழ்த்து கூறியுள்​ளார்.

இது தொடர்​பாக தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தி துறை அமைச்​சர் ​மு.பெ.​சாமி​நாதன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் அன்​புடன் “இசை​ஞானி” என அழைக்​கப்​பட்​ட​வர் இளை​ய​ராஜா. அந்த பெயரே இன்​றைக்கு தமிழரின் இசை அடை​யாள​மாக உலகெங்​கும் ஒலிக்​கிறது.

இந்​திய அரசின் உயரிய விருதுகளான பத்​மபூஷண், பத்​ம​விபூஷண் விருதும், 4 முறை சிறந்த இசையமைப்​பாள​ருக்​கான தேசிய விருதும், “மேஸ்ட்​ரோ” என்று அனை​வ​ராலும் அழைக்​கப்​படு​பவரும், லண்​டன் சிம்​பொனி ஆர்க்​கெஸ்ட்​ரா​வுடன் பணி​யாற்​றிய முதல் இந்​திய இசையமைப்​பாளர் என்ற பெருமை பெற்​றவரும், 8,500-க்கும் மேற்​பட்ட பாடல்​களுக்கு இசையமைத்​தவரும், 1,500-க்​கும் அதி​க​மான திரைப்​படங்​களுக்கு இசையமைத்​தவரும், மாநிலங்​களவை உறுப்​பினரு​மான இளை​ய​ராஜா கடந்த 1976-ம் ஆண்டு வெளி​யான “அன்​னக்​கிளி” திரைப்​படத்​தின் மூலம் இசையமைப்​பாள​ராக அறி​முக​மா​னார்.

தமிழ் சினிமா இசை​யில் ஒரு புதிய புரட்​சியை ஏற்​படுத்​திய இளை​ய​ராஜாவுக்கு மே 14-ம் தேதி தமிழ் சினிமா உலகில் பொன் விழா ஆண்டு என்​பது நமக்​கெல்​லாம் பெருமை அளிக்​கிறது. இந்​நாள் இசை​ஞானி​யின் பொன்​னாள். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித்​துறை சார்​பில் நெஞ்​சார்ந்த வாழ்த்​துகளை தெரி​வித்​து கொள்​கிறேன். இளை​ய​ராஜா​வின் ராஜ இசை என்​றென்​றும் இசைத்​துக்​ கொண்​டே இருக்​கட்​டும்​ என்​று வாழ்​த்​தி மகிழ்​கிறேன்​ என்று அவர்​ கூறியுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x