Published : 21 Apr 2025 06:36 AM
Last Updated : 21 Apr 2025 06:36 AM

குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழப்பு? - அரசியல் தலைவர்கள் கண்டனம்

உறையூர் மின்னப்பன் தெருவில் வீடு வீடாகச் சென்று மாத்திரைகள் வழங்கும் சுகாதார பணியாளர்கள். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சி: ​திருச்சி உறையூரில் குடிநீரில் கழி​வுநீர் கலந்​த​தால் சிறுமி உட்பட 3 பேர் அடுத்​தடுத்து உயி​ரிழந்​த​தாகக் கூறப்​படும் சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். உறையூர் பணிக்​கன் தெரு, மின்​னப்​பன் தெரு பகு​தி​யில் வாந்​தி, வயிற்​றுப் போக்கு காரண​மாக பிரி​யங்​கா(4) என்ற சிறுமி மற்​றும் 2 பெண்​கள் என 3 பேர் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தனர்.

மேலும், 17 பேர் அரசு மருத்​து​வ​மனை​யிலும், 10-க்​கும் மேற்​பட்​டோர் தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். குடிநீரில் கழி​வுநீர் கலந்​ததே இதற்​குக் காரணம் என்று குற்​றம்​சாட்​டி, அப்​பகுதி மக்​கள் நேற்று முன்​தினம் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மாநகராட்சி மறுப்பு: ஆனால், குடிநீரில் கழி​வுநீர் கலக்​க​வில்லை என மறுத்​துள்ள திருச்சி மாநக​ராட்சி நிர்​வாகம், அப்​பகு​தி​யில் நடை​பெற்ற கோயில் திரு​விழா​வில் வழங்​கப்​பட்ட அன்​ன​தானத்தை சாப்​பிட்​ட​தால் உணவு ஒவ்​வாமை காரண​மாகவே மக்​களுக்கு பாதிப்பு ஏற்​பட்​ட​தாக​வும், 4 வயது சிறுமிக்கு பாரம்​பரிய முறை​யில் வயிற்​றில் தொக்கு நீக்​குதல் செய்​யப்​பட்​ட​தால் உயி​ரிழந்​த​தாக​வும் விளக்​கம் அளித்​துள்​ளது.

இந்​நிலை​யில், அப்​பகு​தி​யில் மாநக​ராட்சி சார்​பில் நேற்று 9 இடங்​களில் மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​பட்​டன. மாநக​ராட்​சிப் பணி​யாளர்​கள் வீடு வீடாகச் சென்று நோய்த் தடுப்பு மாத்​திரைகளை வழங்​கினர். அத்​துடன், புதை சாக்​கடை அடைப்பை நீக்​கு​வது, குளோரின் பவுடர் தெளிப்​பது போன்ற பணி​களி​லும் ஈடு​பட்​டுள்​ளனர்.

இப்​பணி​களை நேற்று பார்​வை​யிடச் சென்ற மாநக​ராட்சி மேயர் அன்​பழகனை அப்​பகு​தி​யினர் முற்​றுகை​யிட்​டு, “10 நாட்​களாக குடிநீரில் கழி​வுநீர் கலந்து வரு​வ​தாக நாங்​கள் அதி​காரி​களிடம் தெரி​வித்​தும், உரிய நடவடிக்கை எடுக்​க​வில்​லை. அப்​போதே நடவடிக்கை எடுத்​திருந்​தால், உயி​ரிழப்​போ, உடல்​நலக் குறைவோ ஏற்​பட்​டிருக்​காது” என்​றனர். இழப்​பீடு வழங்க வேண்​டும் இந்த சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: பாதிப்பு ஏற்​பட்ட பகு​தி​யில் 15 நாட்​களாக குடிநீரில் பிரச்​சினை இருப்​ப​தாக மக்​கள் புகார் அளித்​தும், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத​தால் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளன. மக்​களுக்கு அத்​தி​யா​வசி​ய​மான குடிநீரைக் கூட சுகா​தா​ர​மாக அளிக்க முடி​யாத நிலை​யில் அரசு உள்​ளது. உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும்.

பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: தவறு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​காமல், குற்​றங்​களை மூடி மறைக்​கும் திமுக அரசின் போக்கு இப்​போதும் தொடர்​கிறது. பொய்​களைக் கூறி சமாளிப்​பதை விட்​டு​விட்​டு, உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். இதே​போல, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் உள்​ளிட்​டோரும் இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x