Last Updated : 16 Apr, 2025 09:43 AM

1  

Published : 16 Apr 2025 09:43 AM
Last Updated : 16 Apr 2025 09:43 AM

திருச்சி சிவாவுக்கு திடீர் பதவி... திமுகவில் நேருவுக்கும் முக்கியத்துவம் குறைகிறதா?

கே.என்.நேரு | திருச்சி சிவா

வில்லங்கப் பேச்சால் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு அவரிடமிருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மூத்த அமைச்​ச​ரான பொன்​முடி​யின் கட்சி பதவியை பறித்​தது மற்​றவர்​களுக்​கான எச்​சரிக்​கை. அந்த வகை​யில் ஸ்டா​லின் எடுத்​துள்ள இந்த நடவடிக்கை கட்​சிக்கு ஆரோக்​கிய​மான விஷ​யம் தான் என்​றாலும் பொன்​முடி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியை திருச்சி சிவாவுக்கு தந்​திருப்​பது பல்​வேறு ஊகங்​களைக் கிளப்பி விட்​டிருக்​கிறது.

இதன் மூலம் சில விஷ​யங்​களை திமுக தலைமை சொல்​லாமல் சொல்லி இருக்​கிறது என்​கி​றார்​கள் அரசி​யல் பார்​வை​யாளர்​கள். சிவாவை லைம்​லைட்​டுக்கு கொண்டு வந்​திருப்​ப​தன் மூலம் கட்​சி​யின் முதன்​மைச் செய​லா​ள​ரான அமைச்​சர் கே.என்​.நேரு​வுக்​கான முக்​கி​யத்​து​வம் குறைக்​கப்​பட்​டிருப்​ப​தாகச் அவர்​கள் சுட்​டிக்​காட்​டுகி​றார்​கள்.

திமுக மூத்த அமைச்​சர்​களின் ஒரு​வர் கே.என்.நேரு. இவரது மகன் அருண் நேரு பெரம்​பலூர் தொகுதி எம்​பி-​யாக இருக்​கி​றார். இந்த நிலை​யில், கடந்த 7-ம் தேதி தொடங்கி 3 நாட்​கள், அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர்​களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன், மற்​றும் அருண் நேரு ஆகி​யோரை குறி​வைத்து அமலாக்க துறை அதிரடி ரெய்​டு​களை நடத்​தி​யது.

இதன் முடி​வில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​ப​தாக உறு​திப்​படுத்தி இருக்​கும் அமலாக்​கத்​துறை, இதில் அமைச்​சர் நேரு​வுக்​கும் அவரது மகன் அருண் நேரு​வுக்​கும் உள்ள தொடர்​பு​களை​யும் பட்​டியலிட்​டுள்​ளது. இதனிடையே, அமைச்​சரின் சகோ​தரர் ரவிச்​சந்​திரனை விசா​ரணைக்கு ஆஜராகும்​படி அமலாக்​கத்​துறை சம்​மன் அனுப்​பிய​தால் அவர் மருத்​து​வ​மனை​யில் அட்​மிட் ஆனார்.

நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை இத்​தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலை​யில், இதுகுறித்து திமுக தலை​மையி​லிருந்து சம்​பிர​தாய​மாகக் கூட எவ்​வித கண்டன அறிக்​கை​யும் வெளி​யாக​வில்​லை. அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை இத்​தகைய நடவடிக்​கையை மேற்​கொண்ட போது திமுக பொங்கி எழுந்து கடும் கண்​டனம் தெரி​வித்​தது. அவருக்கு ஜாமீன் மறுக்​கப்​பட்ட போதும் திமுக தலைமை பல்​வேறு சட்ட நடவடிக்​கை​களை எடுத்​தது.

ஆனால், அவரை விட சீனிய​ரான கே.என்​.நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை காட்டி வரும் அதிரடிகளுக்கு திமுக தலைமை எவ்​வித கண்​டன​மும் தெரிவிக்​க​வில்​லை. நேரு​வுக்கு ஆதர​வாக திமுக-​வில் உள்ள சட்ட அமைச்​சர், அமைப்​புச் செய​லா​ளர் உள்​ளிட்​டோர் கூட வாய் திறக்​க​வில்​லை. நேருவை அமலாக்​கத்​துறை நடவடிக்கை விவ​காரத்​தில் இப்​படி ஒரேயடி​யாய் கைவிட்​டிருப்​பது அவரது ஆதர​வாளர்​களை கவலை​கொள்​ளச் செய்​துள்​ளது.

நேருவை கண்​டு​கொள்​ளாதது ஒரு​புறமிருக்க, திருச்சி அரசி​யலில் அவரோடு எதிரும் புதிரு​மாய் நிற்​கும் திருச்சி சிவா எம்​பி-யை துணை பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இந்த நேரம் பார்த்து அமர்த்தி இருப்​பதும் நேரு விசு​வாசிகளை கொந்​தளிக்க வைத்​திருக்​கிறது. ஏற்​கெனவே ஒட்​டுமொத்த திருச்சி மாவட்​ட​மும் நேரு​வின் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது.

அதை மூன்​றாகப் பிரித்து உதயநி​தி​யின் நண்​ப​ரான அமைச்​சர் அன்​பில் மகேஸ் திருச்சி தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆக்​கப்​பட்​டார். அத்​துடன் நேரு​வுக்கு இணை​யாக அன்​பில் மகேஸுக்​கும் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்​டது. தற்​போது திருச்சி சிவாவுக்கு தலை​மைக் கழக பதவி வழங்​கப்​பட்​டிருப்​ப​தால் திமுக-வில் நேரு​வுக்​கான முக்​கி​யத்​து​வம் குறித்து கேள்வி எழுப்​பு​கி​றார்​கள்.

செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை நடவடிக்கை எடுத்த போதே, “யாரை​யும் நிம்​ம​தியா இருக்​க​விட​மாட்​டாங்க போல. பாலாஜி மாதிரி நம்​மாள எல்​லாம் ஜெயிலுக்​குப் போக​முடி​யாதுப்​பா” என்று தனது சகாக்​கள் மத்​தி​யில் ஜாலி​யாகப் பேசிய நேரு, மத்​திய அரசின் விசா​ரணை அமைப்​பு​கள் தன் பக்​கம் திரும்​பாமல் இருக்க ஒருசில தற்​காப்பு நடவடிக்​கை​களை​யும் மேற்​கொண்​ட​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது சம்​பந்​த​மாக சிலர் தலை​மை​யிடம் ஏடாகூட​மாகப் போட்​டுக் கொடுக்​கவே, அதுகுறித்து தலை​மைக்கு நேரு தன்​னிலை விளக்​க​மும் அளித்​த​தாகச் சொல்​கி​றார்​கள். நேரு விவ​காரத்​தில் தலைமை மவுனம் காப்​ப​தன் பின்​னணி​யோடு இந்த விவ​காரங்​களை​யும் இப்​போது முடிச்​சுப்​போட்​டுப் பேசுகி​றார்​கள்.

ஆனால் நேரு ஆதர​வாளர்​களோ, “எப்​போதும் தலை​மைக்கு விசு​வாச​மான​வ​ராக இருக்​கும் நேரு, நெருக்​கடிகளுக்கு அஞ்​சாதவர். எத்​தனை சோதனை​கள் வந்​தா​லும் அஞ்​சாமல் திமுக-வுக்​கும் தலை​வ​ருக்​கும் பக்​கபல​மாக நிற்​பார். திருச்சி மாவட்​டத்தை மூன்​றாகப் பிரித்​தா​லும் நேருவை முதன்​மைச் செய​லா​ள​ராக்கி அழகு பார்த்​தவர் ஸ்டா​லின்.

அமலாக்​கத்​துறை நடவடிக்​கை​கள் தொடர்​பாக நேரு​விடம் ஆறு​தலாக பேசிய ஸ்டா​லின், தொடர் நடவடிக்​கை​கள் தொடர்​பாக​வும் விசா​ரித்​த​படி தான் இருக்​கி​றார். இதையெல்​லாம் அறிக்​கை​யாக வெளி​யிட வேண்​டும் என்ற அவசி​யம் இல்​லை. நேருவை திமுக தலைமை என்​றைக்​கும் கைவி​டாது. அவருக்​கான முக்​கி​யத்​து​வ​மும் குறை​யாது” என்​கி​றார்​கள். எத்​தனை தடைகள் வந்​தா​லும் எடுத்த காரி​யத்தை முடித்​துக் காட்​டு​பவர் என்று பேர் வாங்​கியே பழக்​கப்​பட்ட நேரு​வுக்​கும் இது போறாத காலம் தான் போலிருக்​கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x