Published : 16 Apr 2025 06:06 AM
Last Updated : 16 Apr 2025 06:06 AM
ஓசூர்: டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் அனைத்தும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டன.
அதேநேரம், வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக வடமாநில பதிவெண் கொண்ட லாரிகள் ஓசூர் வழியாக வழக்கம்போல இயங்கின. இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு மேல் தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் படிப்படியாக இயக்கப்பட்டன. இதனிடையே, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள அம்மாநில வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், அம்மாநில போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறும்போது, டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT