Published : 12 Apr 2025 04:51 AM
Last Updated : 12 Apr 2025 04:51 AM

தமிழகம் முழுவதும் புதிய நூலகம், வகுப்பறை கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: பொது நூலக இயக்​ககம் சார்​பில் ரூ.84.76 கோடி​யில் கட்​டப்​பட்ட 326 நூல​கக் கட்​டிடங்​கள் மற்​றும் குழந்தை நேய பள்ளி உட்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் கீழ் ரூ.32.64 கோடி​யில் கட்​டப்​பட்ட வகுப்​பறை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி வாயி​லாக நேற்று திறந்​து​வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் 821 பொது நூல​கங்​களுக்கு கூடு​தல் கட்​டிடம், தளவாடங்​கள், கணினி தொடர்​புடைய சாதனங்​கள் மற்​றும் புத்​தகங்​கள் வாங்​குதல் போன்​றவற்​றுக்கு சிறப்பு நிதி​​யாக ரூ.213.46 கோடி அனு​ம​திக்​கப்​பட்​டது. இதில் ஒரு நூல​கக் கட்​டிடம் 500 சதுர அடி என்ற அளவில், 821 நூல​கங்​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​கள் வழி​யாக புதிய கட்​டிடம் கட்​டப்​பட்டு வரு​கிறது.

தற்​பொழுது ஊரக வளர்ச்​சித் துறை மூலம் 246 நூல​கங்​கள், பேரூ​ராட்​சிகள் இயக்​ககம் மூலம் 44 நூல​கங்​கள், நகராட்சி நிர்​வாகத் துறை மூலம் 28 நூல​கங்​கள், சென்னை மாநக​ராட்சி மூலம் 8 நூல​கங்​களில் ரூ.71.72 கோடி செல​வில் கட்​டிடங்​கள், ரூ.6.52 கோடி​யில் நூல்​கள், ரூ.4.73 கோடி​யில் மேஜைகள், நாற்​காலிகள், ரூ. 1.79 கோடி​யில் கணினி தொடர்​புடைய சாதனங்​கள் என ஆகிய​வற்றை மக்​கள் பயன்​பாட்​டுக்கு முதல்​வர் ஸ்டா​லின் திறந்​து​வைத்​தார்.

குழந்தை நேய பள்ளி உட்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின்கீழ் ரூ.1,014 கோடி​யில் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி மற்​றும் நடுநிலைப் பள்​ளி​களில் 3148 வகுப்​பறை​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. அதன் தொடர்ச்​சி​யாக, கள்​ளக்​குறிச்​சி, காஞ்​சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம், ராணிப்​பேட்​டை, சேலம், தஞ்​சாவூர், திருச்​சி, திருப்​பத்​தூர், தரு​மபுரி, திரு​வாரூர் மாவட்​டங்​களில் 100 ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி மற்​றும் நடுநிலைப் பள்​ளி​களில் ரூ.32.84 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 199 வகுப்​பறைக் கட்​டிடங்​களை​யும் முதல்​வர் திறந்​தார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், சி.வி. கணேசன், டி.ஆர்.பி. ராஜா, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், பொதுநூலகத் துறை இயக்குநர் பொ.சங்கர், ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பா.பொன்னையா, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்​தில் உள்ள 21 கோயில்​களில் காணிக்கை மூலம் கிடைத்த 1,074 கிலோ தங்​கத்தை வங்​கி​யில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

1,074 கிலோ தங்கம் முதலீடு: இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் உள்ள 21 கோயில்​களில் காணிக்​கை​யாக வரப்​பெற்ற பலமாற்​றுப் பொன் இனங்​களில் கோயிலுக்கு பயன்​பாடு இல்​லாத பொன் இனங்​களை உருக்​கியதன் மூலம் 1,074 கிலோ 123 கிராம் 488 மில்​லிகி​ராம் சுத்த தங்க கட்​டிகள் கிடைத்​தன. இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் அந்த தங்க கட்​டிகள், பாரத ஸ்டேட் வங்​கி​யின் தங்க முதலீட்டு திட்​டத்​தில் முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளன.

அதற்​கான அடை​யாள​மாக திருச்சி மாவட்​டம் சமயபுரம் மாரி​யம்​மன், திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி, கோவை மாவட்​டம் ஆனைமலை மாசாணி​யம்​மன் ஆகிய கோயில்​களின் நிர்​வாகி​களிடம் தங்க முதலீட்​டுக்​கான பத்​திரங்​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று சென்னை தலை​மைச் செயல​கத்​தில் வழங்​கி​னார். அந்த கோயில்​களின் அறங்​காவலர் குழு தலை​வர்​கள் பெற்​றுக் கொண்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x