Published : 09 Jul 2018 01:55 PM
Last Updated : 09 Jul 2018 01:55 PM

பணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தலைமைச் செயலகத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகம் 150 ஆண்டுகளை கடந்த தமிழ்நாடு அரசின் மிகவும் பழமையான துறைகளில் ஒன்றாகும். இத்துறையானது, நில அளவைப் பிரிவுகள், நில அளவை குறியீடு, நில ஆவணங்கள் பராமரித்தல், நிலஉரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் அமைச்சுப் பணியாளர்களாவும், நில அளவை சார்நிலைப் பணியாளர்களாகவும் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், நில அளவர், இளநிலை உதவியாளர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x