Published : 11 Apr 2025 06:10 AM
Last Updated : 11 Apr 2025 06:10 AM

எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணனுக்கு பார​திய பாஷா விருது: முதல்​வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணனுக்கு பார​திய பாஷா விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த இலக்​கிய அமைப்​பான பார​திய பாஷா பரிஷத், அகில இந்​திய அளவில் சிறந்த இலக்​கிய​வா​தி​களை தேர்​வுசெய்து விருது வழங்கி கவுர​வித்து வரு​கிறது. அந்த வகை​யில் தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணன் பார​திய பாஷா பரிஷத் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளார்.

இந்த விருது ரூ..1 லட்​சம் ரொக்​கப் பரிசு, பாராட்​டுச் சான்​றிதழ் ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. கொல்​கத்​தா​வில் மே மாதம் 1-ம் தேதி நடை​பெறும் விழா​வில் எஸ். ​ராமகிருஷ்ணனுக்கு இவ்​விருது வழங்​கப்​படும் என்று பார​திய பாஷா பரிஷத் அமைப்பு அறி​வித்​துள்​ளது.

தமிழின் முன்​னணி எழுத்​தாளர்​களில் ஒரு​வ​ராக அறியப்​படும் எஸ்​.​ராமகிருஷ்ணன் 100-க்​கும் மேற்​பட்ட நூல்​களை எழு​தி​யுள்​ளார். அவரது ‘சஞ்​சா​ரம்’ நாவலுக்கு 2018-ம் ஆண்​டுக்​கான சாகித்ய அகாடமி விருது கிடைத்​தது. அவர் தமிழக அரசு விருது, கலைஞர் பொற்​கிழி விருது, இலக்​கியச் சிந்​தனை விருது, தாகூர் இலக்​கிய விருது, ஞான​வாணி விருது, மாக்​சிம் கார்க்கி விருது உட்பட ஏராள​மான விருதுகளை​யும் பெற்​றுள்​ளார்.

அவரது படைப்​பு​கள் மலை​யாளம், தெலுங்​கு, கன்​னடம், இந்​தி, வங்​காளம் உள்​ளிட்ட இந்​திய மொழிகளில் மட்​டுமின்றி ஆங்​கிலம், ஜெர்​மனி, பிரெஞ்​சு, ஸ்பானிஷ் மொழிகளி​லும் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதுகுறித்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், “இந்​திய அளவில் புகழ்​மிக்க பார​திய பாஷா பரிஷித் அமைப்​பின் விருது பெறவுள்ள எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணனுக்கு என் பாராட்​டு​கள். சமகாலத் தமிழிலக்​கி​யத்​தின் நன்கு அறியப்​பட்ட முக​மாக விளங்​கி, குறிப்​பிடத்​தக்க பல படைப்​பு​களை அளித்​து, சாகித்ய அகாடமி விருது, இயல் விருது, கலைஞர் பொற்​கிழி விருது உட்பட பல உயரிய அங்​கீ​காரங்​களைப் பெற்​றுள்ள அவரது எழுத்​துப் பணிக்​கான மற்​றுமொரு ஊக்​க​மாக இவ்​விருது அமை​யும் என நம்​பு​கிறேன். தமிழ்ச் சமூகத்​தின் வளர்ச்​சிக்​கும், மானுடத்​தின் மேன்​மைக்​கும் உரமாகும் மேலும் பல படைப்​பு​களை அவரிடம் இருந்​து எதிர்​நோக்​கு​கிறேன்​'' எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x