Published : 09 Apr 2025 05:23 AM
Last Updated : 09 Apr 2025 05:23 AM

டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

திருச்சி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சி: டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்​கில், திருச்சி நீதி​மன்​றத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நேற்று ஆஜரா​னார். திருச்சி ஜூடீசி​யல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் (எண்​.4) திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார் தொடர்ந்த அவதூறு வழக்​கில் சீமான் ஆஜரா​காமல் இருந்​தார். நேற்று முன்​தினம் நடை​பெற்றவழக்கு விசா​ரணை​யின்​போதும் சீமான் ஆஜரா​காத​தால், ஏப்​.8-ம் தேதி நீதி​மன்​றத்​தில் கட்​டா​யம் ஆஜராக வேண்​டும் என்று நீதிபதி விஜயா உத்​தர​விட்​டார்.

அதன்​படி, திருச்சி ஜே.எம். 4 நீதி​மன்​றத்​தில் நேற்று சீமான் ஆஜரா​னார். அப்​போது, நீதிபதி உத்​தர​வின்​பேரில், டிஐஜி வருண்​கு​மார் தரப்​பில் தாக்​கல் செய்த வழக்கு குறித்த ஆவண நகல்​கள் சீமான் தரப்​புக்கு வழங்​கப்​பட்​டன. தொடர்ந்​து, ஏப். 29-ம் தேதிக்கு விசா​ரணையை தள்​ளி​வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

பின்​னர் சீமான் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஆம்​ஸ்ட்​ராங்க் கொலை வழக்கு போல​வே, 2 ரவுடிகளை என்​க​வுன்ட்​டர் செய்​து, அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ராமஜெ​யம் கொலை வழக்​கை​யும் முடிவுக்கு கொண்​டுவர போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர். உண்​மை​யான குற்​ற​வாளி​களை கண்​டறி​யாமல், வழக்கை முடிப்​ப​திலேயே காவல் துறை முனைப்பு காட்​டு​கிறது. தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட மசோ​தாக்​களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதி​காரம் இல்லை என்று உச்ச நீதி​மன்​றம் அளித்​துள்ள தீர்ப்பு வரவேற்​கத்​தக்​கது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x