Published : 08 Apr 2025 02:03 AM
Last Updated : 08 Apr 2025 02:03 AM
சென்னை: கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்கும் புதிய சட்டம் கடந்த 4-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து துறை ஆணையர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் ‘கனிம வளம் கொண்ட நிலங்கள் மீதான வரி சட்டம் - 2024’ என்ற புதிய சட்டம் அரசிதழில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. ‘கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரி விதிகள் - 2025’ என்ற புதிய விதியும் இயற்றப்பட்டு, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 32 கனிமங்களுக்கு வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து வரி, நிதிமட்டுமின்றி, கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கான வரியையும் ஏப். 4 முதல் கூடுதலாக செலுத்த வேண்டும். இதில், அதிகபட்சமாக சிலிமனைட்டுக்கு ஒரு டன் ரூ.7 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு சுமார் ரூ.2,400 கோடி வருவாய் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT