Published : 12 Mar 2025 06:20 AM
Last Updated : 12 Mar 2025 06:20 AM

போக்​கு​வரத்​து கழகங்​களுக்கு 19 விருதுகள்: அமைச்சர் சிவசங்கர் பாராட்டு

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​கள் 19 விருதுகள் பெறும் வகை​யில் பணி​யாற்​றியமைக்​காக பணி​யாளர்​களை துறை​யின் அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் பாராட்​டி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் விடுத்த அறிக்​கை​: அனைத்து இந்​திய மாநில சாலை போக்​கு​வரத்​துக் கழகங்​கள் கூட்​டமைப்பின் விருதை தமிழக அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் ஒவ்​வொரு ஆண்​டும் தொடர்ந்து பெற்று வரு​கின்​றன.

அந்த வகை​யில் கடந்த 2023-24-ம் ஆண்​டுக்​கான விருதுகளில் 19 விருதுகள் தமிழக அரசு போக்​கு​வரத்​து கழகங்களுக்கு அறிவிக்​கப்​பட்​டது. இந்த விருதுகளை டெல்​லி​யில் கடந்த 7-ம் தேதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முன்​னாள் ஆளுநர் கிரண்​பேடி​யிடம் இருந்து சம்​பந்​தப்​பட்ட போக்​கு​வரத்​துக் கழக தலைமை அதி​காரி​கள் பெற்​றுக் கொண்​டனர்.

போக்​கு​வரத்​துக் கழகங்​கள் 19 விருதுகள் பெறும் வகை​யில், தேவை​யான கட்​டமைப்பை ஏற்​படுத்​தித் தந்த முதல்வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் ஆகியோருக்கு நன்​றி. சிறப்​பாக பணி​யாற்​றிய ஒட்​டுநர்​கள், நடத்​துநர்கள், தொழில்​நுட்ப பணி​யாளர்​கள், அலுவலர்​கள் மற்​றும் அனைத்து பணி​யாளர்​களுக்கு பாராட்​டை​யும், நன்​றியை​யும் தெரிவிக்​கிறேன். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x