Published : 11 Mar 2025 05:31 AM
Last Updated : 11 Mar 2025 05:31 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர். சக்திவேல், பி. தனபால் ஆகிய இருவரும் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு செய்த பரிந்துரையை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி இருவருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து இருவரும் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT