Published : 10 Mar 2025 12:40 AM
Last Updated : 10 Mar 2025 12:40 AM

வழக்கறிஞர் தொழில் உன்னதமானது; வர்த்தகமல்ல: நில பிரச்சினை வழக்கில் நீதிபதி அறிவுரை

சென்னை: வழக்​கறிஞர் தொழில் உன்​னத​மான தொழில், வர்த்​தகம் அல்ல எனத் தெரி​வித்த சென்னை உயர் நீதி​மன்​றம், நிலப் பிரச்​சினை தொடர்​பான வழக்​கின் உண்​மைத்​தன்மை மற்​றும் வழக்​கறிஞர்​கள் மீதான குற்​றச்​சாட்டு தொடர்​பாக சிபிசிஐடி விசா​ரிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை, மயி​லாப்​பூரில் நூர்​ஜ​கான் பீவி, ஷேக் மாதர், அப்​துல் ஹாசன் ஆகியோ​ருக்கு சொந்​த​மான 3 கிர​வுண்ட் நிலத்தை ஆக்​கிரமிப்​பாளர்​களிடம் இருந்து மீட்​டு, விலைக்கு வாங்க கமலேஷ் சந்​திரசேகரன் என்​பவர் ஒப்​பந்​தம் செய்​திருந்​தார்.

மீட்​கப்​பட்ட நிலத்தை தனக்கு விற்​காமல் ரியல் எஸ்​டேட் நிறு​வனத்​துக்கு விற்க உரிமை​யாளர்​கள் ஒப்​பந்​தம் செய்​த​தாக கூறப்​படு​கிறது. இதுதொடர்பாக அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா விசா​ரித்​தார். விசா​ரணை​யின் போது, எதிர்​மனு​தா​ரருக்​காக ஆஜரான வழக்​கறிஞர் கணேசன், “மனு​தா​ரர்​களுக்​காக ஆஜராகும் வழக்​கறிஞர் ப்ரீத்தி பாஸ்​கர் பணி​யாற்​றும் சட்ட நிறுவன உரிமை​யாளர் சட்​டப்​படிப்பை படிக்​காதவர்” என்பன போன்ற குற்​றச்​சாட்டை கூறினார்.மேலும், அந்த சட்ட நிறு​வனம் நிலப்​பிரச்​சினை உள்​ளிட்ட வழக்​கு​களில் தீர்வு பெற்​றுத் தரு​வ​தாக விளம்​பரம்
செய்​வ​தாக​வும் தெரி​வித்​தார்.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர், எதிர்​மனு​தா​ரர் வழக்​கறிஞர் மீது சில வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​ப​தாக பரஸ்பர குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்​தார். இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: இந்​திய பார் கவுன்​சில் விதி​களின்​படி, வழக்​கறிஞர்​கள் தங்​கள் பெயரை எந்த நிறு​வன​மும் பயன்​படுத்த அனு​ம​திக்க கூடாது. வழக்​கில் பெற்ற தீர்ப்​பு​களை சம்​பந்​தப்பட்ட நீதிபதி புகைப்​படத்​துடன் இணை​யதளத்​தில் வெளி​யிட்​டிருப்​பது மக்​களிடையே தவறான புரிதலை ஏற்​படுத்​தும். வழக்​கறிஞர் தொழில் உன்​னத​மான தொழில், வர்த்​தகமோ, வணி​கமோ அல்ல. நீதி​மன்​றத்​தின் அதி​காரி​யாக திகழும் வழக்​கறிஞர், நீதி நிர்​வாகத்​தில் தலை​யிடக் கூடாது.

இவ்​வழக்​கில் சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞர் மீதான குற்​றச்​சாட்டு குறித்​தும், வழக்​கின் உண்​மைத் தன்மை குறித்​தும் சிபிசிஐடி துணை ஆணை​யர் அந்​தஸ்து அதி​காரி தலை​மை​யில் சிறப்​புக் குழு அமைத்து விரி​வாக விசா​ரிக்க வேண்​டும். இவ்வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரிவித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x