Last Updated : 27 Jul, 2018 11:53 AM

 

Published : 27 Jul 2018 11:53 AM
Last Updated : 27 Jul 2018 11:53 AM

கருணாநிதி விரைவில் நலம் பெறுவார்; வதந்திகளை நம்பாதீர்: ஜெ.அன்பழகன்

தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர் என்று ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில், வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இதனால் கோபாலபுரம் வீட்டிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்துத் திமுக எம்எல்ஏ அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘‘தலைவர் கருணாநிதி மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன. கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர்’’ என தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x