Published : 07 Mar 2025 04:23 PM
Last Updated : 07 Mar 2025 04:23 PM

சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடை நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் உணவகம்

சென்னை அசோக்நகர் 11-வது நிழற்சாலையில் உள்ள பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நடத்தப்படும் உணவகம்

அசோக் நகர் 11-வது நிழற்​சாலை​யில் பேருந்து நிழற்​குடை மற்​றும் நடை​பாதையை ஆக்​கிரமித்து உணவகம் நடத்​து​வ​தால் பயணி​களும், அப்​பகுதி குடி​யிருப்​பு​வாசிகளும் அவதிக்​குள்​ளாவ​தாக உங்​கள் குரலில் வாசகர் ஒரு​வர் புகார் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அசோக்​நகரை சேர்ந்த வாசகர் ஒரு​வர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பிரத்​தி​யேக ‘உங்​கள் குரல்’ தொலைபேசி புகார் சேவை எண்ணை தொடர்​பு​கொண்டு தெரி​வித்​த​தாவது:

சென்னை மாநக​ராட்​சி​யின் 135-வது வார்​டு, அசோக் நகர், 11-வது நிழற்​சாலை​யில் பேருந்து நிறுத்​தம் மற்​றும் நடை​பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. கோயம்​பேட்​டில் இருந்து புதுச்​சேரி செல்​லும் பேருந்​துகள் அனைத்​தும் இந்த பேருந்து நிறுத்​தத்​தில்​தான் பயணி​களை ஏற்​றிச் செல்​கின்​றன.

இந்த பேருந்து நிறுத்​தம் முன்பாக சாலை​யோர தள்​ளுவண்டி உணவகங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த உணவகம் நடத்​து​வோர், பேருந்து நிழற்​குடை மற்​றும் நடை​பாதையை ஆக்​கிரமித்து உணவக​மாக மாற்​றி​யுள்​ளனர். உணவருந்த வரு​வோர் அமர்ந்து உணவருந்​து​வதற்கு ஏது​வாக நாற்​காலிகள், குடிநீர் கேன்​கள் உள்​ளிட்​ட​வற்றை அங்கே வைத்​துள்​ளனர்.

பேருந்து நிழற்​குடை​யும், நடை​பாதை​யும் எப்​போதும் உணவருந்​து​வோ​ரால் நிரம்பி இருக்​கும். அவர்​கள் வரும் இருசக்கர வாக​னங்​களை​யும் சாலை​யோரத்​தில் நிறுத்தி சாலை​யின் அகலத்தை குறைத்​து​விடு​கின்​றனர். இதனால் பேருந்​துக்​காக காத்​திருப்​போர் சாலை​யில் நின்று பேருந்து ஏறி செல்​கின்​றனர். இதனால் இப்​பகுதி நெரிசலாக காணப்​படு​கிறது. அங்கு கூடும் கூட்​டத்​தால் குடி​யிருப்​பு​வாசிகளும் சிரமப்​படு​கின்​றனர்.

மேலும், அந்த சாலை​யோர உணவகங்​களில் இரவு நேரங்​களில் கொத்து பரோட்டா போடு​கின்​றனர். இதனால் இரவு முழு​வதும் தவா​வில் கொத்​தும் சத்​தம் கேட்​டபடி இருப்​ப​தால், அப்​பகு​தி​களில் வசிப்​போர் நிம்​ம​தி​யான உறக்​கம் இல்​லாமல் அவதிப்​படு​கின்​றனர். துரித உணவு​களை தயாரிக்​கும்​போது வெளியேறும் மிள​காய் நெடி பரவி குடி​யிருப்பு வாசிகள் அவதிக்​குள்​ளாகின்​றனர்.

இதுதொடர்​பாக மாநக​ராட்​சி​யின் புகார் எண் 1913, மாநக​ராட்சி ஆணை​யரின் மின்​னஞ்​சல் போன்​றவற்​றில் புகார் தெரி​வித்த நிலை​யில், கடையை அகற்​றி​விட்​ட​தாக ஒவ்​வொரு முறை​யும் பதில் கடிதம் கொடுக்​கின்​றனர். ஆனால் அங்கு கடைகள் வழக்​கம்​போல இயங்​கி வரு​கின்​றன. இவ்​வாறு வாசகர்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x