கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்​தவர் கவிஞர் நந்​தலாலா (70). இந்​தி​யன் வங்​கி​யில் பணி​யாற்றி ஓய்வுபெற்ற இவர், தமுஎகச மாநிலத் துணைத் தலை​வ​ராக​வும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்​றப் பொதுக்​குழு உறுப்​பின​ராக​வும் இருந்​தவர்.

பல்​வேறு நூல்​களை எழு​தி​யுள்ள நந்​தலாலா, உடல் நலக்​குறைவு காரண​மாக பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்று கால​மா​னார். அவருக்குமனைவி ஜெயந்​தி, மகள்​கள் பார​தி, நிவே​திதா உள்​ளனர். நந்தலாலா மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், திக தலை​வர் கி.வீரமணி, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in