Published : 04 Mar 2025 06:15 AM
Last Updated : 04 Mar 2025 06:15 AM

அனைத்து திரையரங்குகளிலும் ஆய்வு செய்ய குழு: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தகவல்

கோப்புப் படம்

சென்னை: சென்​னை எழும்​பூரில் செயல்​பட்டு வரும் பிரபல திரையரங்​கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை அடுத்து, சென்னை மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை நியமன அதி​காரி சதீஷ்கு​மார் தலைமையி​லான குழு​வினர், அத்​திரையரங்​கில் நேற்று சோதனை​யிட்​டனர்.

அப்​போது திரையரங்​கில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் வைக்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி சதீஷ்கு​மார் கூறிய​தாவது: இந்த காலா​வ​தி​யான குளிர்​பானங்​கள், பாப்​கார்ன்​கள் கேரளா​வில் இருந்து விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன.

அந்​நிறு​வனத்​துக்​கும் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த குளிர்​பானங்​களின் காலா​வதி தேதி கடந்த நவம்​பர் மாதத்​துடன் முடிவடைந்த நிலை​யிலும், தொடர்ந்து விற்​பனை செய்து வந்​துள்​ளனர்.

இதை யொட்டி கேன்​டீன் உரிமை​யாளர் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். அதே​போல் சென்னை முழு​வதும் உள்ள திரையரங்​கு​களில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் குறித்து சோதனை​கள் மேற்கொள்​வதற்​காக சென்னை மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை சார்​பில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இக்​குழு விரை​வில் அனைத்து திரையரங்​கு​களுக்​கும் நேரடி​யாகச் சென்று சோதனை மேற்​கொள்​ளவுள்​ளது என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x