Published : 28 Feb 2025 05:50 AM
Last Updated : 28 Feb 2025 05:50 AM

போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி மார்ச் 6-ல் பேரணி

சென்னை: சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த மாதம் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் பலன்கள், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை மறுக்கப்படுவதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி வழங்காததுதான் காரணம்.

அதேநேரம், கடந்த 2022-ம் ஆண்டு வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையைவழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு உரிய நிதி ஒதுக்க வலியுறுத்தி வரும் 6-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x