Published : 31 Jul 2018 08:18 AM
Last Updated : 31 Jul 2018 08:18 AM
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி திருவாரூரில் இரு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி, அவர் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில், அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேபோல, கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவிகள் நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி, அவர் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT