Published : 26 Feb 2025 06:25 AM
Last Updated : 26 Feb 2025 06:25 AM

மும்மொழி கொள்கையை எதிர்த்து மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், பேரணி

மும்மொழி கொள்கையை எதிர்த்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் திமுக சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணியினர் சைதாப்பேட்டை, தபால் நிலையம் அருகே கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ம.பிரபு |

சென்னை: ​மும்​மொழி கொள்​கைக்கு எதிராக தமிழகம் முழு​வதும் மாணவர் இயக்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் நேற்று ஆர்ப்​பாட்​டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்​களில் மத்திய அரசு அலுவல​கங்களை முற்றுகை​யிட்டும், பேரணி நடத்​தி​யும் மாணவர் அமைப்புகள் கண்டனங்கள் தெரி​வித்தன.

இதன் ஒருபகு​தியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் அமுதரசன் தலைமை தாங்​கினார். இதில் இந்திய மாணவர் சங்கம், மதிமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம், சமூக நீதி மாணவர் இயக்​கம், முற்​போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்​று மும்​மொழிக் கொள்​கையை திணிக்கக் கூடாது, மத்திய அரசு நிதி வழங்க வேண்​டும் என முழக்​கமிட்​டனர்.

முன்னதாக சைதாப்​பேட்​டை​யில் பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை வழியாக பேரணியாக சென்ற மாணவ அமைப்​பினர், துணை தபால் நிலை​யத்தை முற்றுகை​யிட்டு ஆர்ப்​பாட்டம் நடத்தினர். அடையாறு பிஎஸ்​என்எல் அலுவல​கம், திரு​வொற்றியூர் தபால் நிலை​யம், தண்டை​யார்​பேட்டை தபால் நிலையம் அருகிலும் ஆர்ப்​பாட்​டம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x