Published : 26 Feb 2025 07:08 AM
Last Updated : 26 Feb 2025 07:08 AM

கோடை மின்தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தரவேண்டும்: மின்வாரிய தலைவர் கோரிக்கை

சென்னை: “தமிழகத்​தில் வரும் கோடை காலங்​களில் மின் விநி​யோகத்தை சமாளிப்​ப​தற்காக மத்திய தொகுப்​பில் இருந்து கூடு​தலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்​சாரம் வழங்க வேண்​டும்” என மத்திய அரசிடம், மின்​வாரிய தலைவர் ஜெ.ரா​தாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்​துள்ளார்.

புதுடெல்​லி​யில் மத்திய அரசின் எரிசக்​தித் துறை செயலர் பங்கஜ் அகர்​வால் மற்றும் நிலக்கரி துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோ​ருடன் இணை கூட்டுக்​குழு கூட்டம் நேற்று நடைபெற்​றது. இக்கூட்​டத்​தில் தமிழக மின்​வாரிய தலைவர் ஜெ.ரா​தாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகை​யில், “தமிழகத்​தில் வரும் கோடை காலங்​களில் மின் விநி​யோகத்தை சமாளிப்​ப​தற்காக மத்திய தொகுப்​பில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்​டும்.

மேலும், குறுகிய காலத்​துக்கு மின் ஒதுக்​கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்றார். பின்னர், தமிழக மின்​வாரியத் திட்​டங்​களுக்கு நிதி வழங்கி வரும் பவர் பைனான்ஸ் கார்ப்​பரேஷன், ஊரக மின்​மய​மாக்கல் கழக நிறு​வனம் ஆகிய நிறு​வனங்​களின் அலுவலர்களை சந்தித்து, திட்​டங்​களுக்கு வழங்க வேண்டிய நிதி​யினை விரைந்து வழங்​கு​மாறு வலியுறுத்​தினார்.

இக்கூட்​டத்​தில், உத்திர பிரதேச மாநில எரிசக்​தித் துறை கூடுதல் தலைமை செயலர் நரேந்திர பூஷன் உள்​ளிட்ட பல்​வேறு அலு​வலர்​கள் கலந்​து​ கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x