Last Updated : 24 Feb, 2025 06:24 AM

 

Published : 24 Feb 2025 06:24 AM
Last Updated : 24 Feb 2025 06:24 AM

மத்திய அரசு திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

கோப்புப் படம்

சென்னை: ‘பிரதம மந்​திரி உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களை ​முறைப்​படு​த்​து​வதற்​கான ​திட்​டத்​தின்​ கீழ்​, உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​கள்​ அ​தி​களவு பயன்​பெறும்​ வகை​யில்​, கடன்​ வழங்​கு​வதற்​கான ​கால அவ​காசம்​ நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

நமது நாட்​டில்​ உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களில்​ மிக​​வும்​ குறைவான அளவே ​முதலீடு என்​ற ​போ​தி​லும்​, 74 சதவீத மக்​களுக்​கு வேலை​வாய்​ப்​பினை அளித்​து வரு​கிறது. எனினும், இந்​நிறுவனங்​கள்​ பெரு​ம்​பாலும்​ ​முறைப்படு​த்​த​ப்​படாத நிலை​யில்​ உள்​ளன. எனவே, இத்​தகைய உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​கள்​ எ​திர்​கொள்​ளும்​ சவால்​களை ​திறம்​படகை​யாள​வும்​, நன்​கு செயல்​படும்​ குழுக்​கள்​, கூட்​டுறவு அமைப்​பு​கள்​, பு​தி​தாக உணவுப்​ ப​த​ப்​படு​த்​து​ம்​ நிறுவனங்​களை அமை​க்​க​​வும்​, ஏற்​கெனவே இ​யங்​கிவரு​ம்​ நிறுவனங்​களை மேம்​படு​த்​த​வும்​, ‘ஆத்​மநிர்​பர்​ பாரத்​ அபி​யான்’​​திட்​டத்​தின்​ ஒரு பகு​தி​யாக, ‘பிரதம மந்​திரி உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களை ​முறைப்​படு​த்​து​வதற்​கான ​திட்​டம்​ செயல்​படு​த்​த​ப்​படு​கிறது.

தனிப்​பட்​ட குறு நிறுவனங்​களின்​ ​போட்​டித்​ ​திறனை அ​தி​கரித்​து, அதன்​ மூலம்​ ​முறைப்​படு​த்​துதலை ஊக்​குவி​க்​க​​வும்​, உழவர்​ உற்​ப​த்​தி​யாளர்​ அமைப்​பு​கள்​, சுயஉதவி​க்​ குழுக்​கள்​, உற்​ப​த்​தி​யாளர்​ கூட்​டுறவு அமைப்​பு​களின்​ ​விளைபொருட்​களை ம​திப்​பு​க்​ கூட்​டி ​விநி​யோகம்​ செய்​யும்​ இணைப்​பினை மேம்​படு​த்​து​வ​தே இத்​திட்​டத்​தின்​ நோக்​க​மாகும்​.

இத்​திட்​டத்​தின்​ கீழ்​, உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ தொழிலில்​ ஈடு​பட்​டுள்​ள குறுந்​தொழில்​ நிறுவனங்​களுக்​கும்​, நன்​கு செயல்​படும்​ நிறுவனங்​களின்​ ​விரிவாக்​கத்​துக்​கும்​ ​மானி​யம்​ வழங்​கப்​படு​கிறது.

ரூ.10 லட்​சம்​ வரை ​மானி​யம்: அதன்​படி, தனிநபர்​ மற்​றும்​ மகளிர்​ குழு, உழவர்​ உற்​ப​த்​தி​யாளர்​ அமைப்​பு​களுக்​கு, குறு நிறுவனங்​களை தொடங்​கு​வதற்​கு நி​தி​யுத​வி, கூட்​டுறவு அமைப்​பு​களுக்​கு இயந்​திர தளவாடங்​கள்​ திட்​ட ம​திப்​பில்​, 35 சதவீதம்​ ​மானி​யம்​, அ​தி​கபட்​சம்​, ரூ.10 லட்​சம்​ வரை ​மானி​யம்​ வழங்​கப்​படு​கிறது.

சிறு கருவி​கள்​ வாங்​க சுய உதவி​க்​ குழுக்​களுக்​கு அடிப்​படை மூலதனத்​திற்​காக குழு​வில்​ ஒரு நபரு​க்​கு ரூ.40 ஆ​யிரம்​ நி​தி உத​வி வழங்​கப்​படும்​. மேலும், பொது​வான உட்​கட்டமைப்​பு வச​தி​கள்​ ஏற்​படு​த்​து​வதற்​கு ​திட்​டம​திப்​பில்​ 35 சதவீத ​மானியத்​துடன்​ கடன்​ உத​வி, வர்​த்​தக ​முத்​திரை மற்​றும்​ சந்​தைப்​படு​த்​துதலுக்​காக 50%​ ​மானி​யத்​துடன்​ கட​னுத​வி வழங்​கப்​படும்​.

இந்​நிலை​யில்​, இத்​திட்​டத்​தின்​ கீழ்​ அ​தி​களவு உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​கள்​ பயன்​பெறும்​ வகை​யில், கடன்​ வழங்​கு​வதற்​கான ​கால அவ​காசம்​ வரு​ம்​ 2026 ​மார்​ச்​ 31-ம்​ தே​தி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, ​மாநில அளவி​லான வங்​கி​யாளர்​கள்​ குழுமத்​தின்​ அ​தி​காரி​கள்​ கூறிய​தாவது: பிரதம மந்​திரி உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களை ​முறைப்​படு​த்​து​வதற்​கான ​திட்​டத்​தின்​ கீழ்​, 2024 அக். 3-ம்​ தே​தி வரை 805 ​விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கு வங்​கி மூலம்​ கடன்​ வழங்​கப்​பட்​டுள்​ளது. இ​தில்​, மிக அ​தி​கபட்​ச​மாக கடலூர்​ ​மாவட்​டத்​தில்​ 132 பேரு​க்​கும்​, ​விழுப்​புரம்​ ​மாவட்​டத்​தில்​ 63 பேரு​க்​கும்​, சேலம்​ ​மாவட்​டத்​தில்​ 55 பேரு​க்​கும்​ கடன்​ வழங்​கப்​பட்​டுள்​ளது.

12 ஆ​யிரம்​ குறு நிறுவனங்​களுக்​கு... இத்​திட்​டத்​தின்​ கீழ்​, வரு​ம்​ 2026-ம்​ ஆண்​டு​க்​குள்​ 12 ஆ​யிரம்​ குறு நிறுவனங்​களுக்​கு கடன்​ வழங்​க இல​க்​கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. உணவுப்​ ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​கள்​ அ​தி​களவு பயன்​பெறும்​ வகை​யில்​, இத்​திட்​டத்​தின்​ கீழ்​ கடன்​ வழங்​கு​வதற்​கான ​கால அவ​காசம்​ வரு​ம்​ 2026 ​மார்​ச்​ 31-ம்​ தே​தி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும்​, ஏற்​கெ​னவே ​விண்​ணப்​பித்​து நிலு​வை​யில்​ உள்​ள ​விண்​ணப்​பங்​களை​யும்​ ​விரைவாக பரிசீலித்​து கடன்​ வழங்​க​​வும்​ வங்​கி​களுக்​கு அறிவுறுத்​த​ப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அ​தி​காரிகள்​ தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x