உயர் நீதிமன்றத்தில் டச் ஸ்கிரீன் வசதியுடன் டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெககனேஷன்’ தொழில்நுட்பம்: வழக்கறிஞர்கள் வரவேற்பு 

உயர் நீதிமன்றத்தில் டச் ஸ்கிரீன் வசதியுடன் டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெககனேஷன்’ தொழில்நுட்பம்: வழக்கறிஞர்கள் வரவேற்பு 
Updated on
2 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குகளை எளிதாக விசா​ரிக்​கும் வகையில் டச் ஸ்கிரீன் வசதி​யுடன் கூடிய டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெகக​னேஷன்’ தொழில்​நுட்பம் அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் தீர்ப்புகளை விரைவாகப் பெற முடி​யும் என மூத்த வழக்​கறிஞர்கள் கருத்து தெரி​வித்​துள்ளனர்.

சென்னை உயர் நீதி​மன்றம் மற்றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் அனும​திக்​கப்​பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. இதில் தற்போது தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீரா​முடன் சேர்த்து மொத்தம் 65 நீதிப​திகள்பணியில் உள்ளனர். 10 நீதிப​திகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலி​யிடங்களை நிரப்பஉச்ச நீதி​மன்ற மற்றும் உயர் நீதி​மன்ற கொலீஜியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உயர் நீதி​மன்​றத்தை ‘பேப்​பர்​-லெஸ்’ டிஜிட்டல் நீதி​மன்​றமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்​கப்​பட்டு வருகின்றன. இதற்காக வழக்கு விவரங்​கள், நீதி​மன்றதீர்ப்பு​கள், முந்தைய ஆவணங்கள் அனைத்​தும் கணினிமய​மாக்​கப்​பட்டு வருகின்றன. உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​திகள் தீர்ப்பு அளிப்பது 10 சதவீதம் என்றால் மீதமுள்ள 90 சதவீதம் வழக்கு ஆவணங்களை சரிபார்க்க வேண்​டி​யுள்​ளது. ஒரு வழக்கு பண்டல் ரெக்​கார்டு ரூமில் இருந்து நீதி​மன்ற அறைக்கு வரும்​போது அங்கு நீதிபதி உத்தர​வுகளைசரிபார்த்​ததும் நீதிப​தி​யின் உதவி​யாளரிடம் செல்லும், அதை உதவி​யாளர் சரிபார்த்து மீண்​டும் கையெழுத்​துக்காக நீதிப​தியிடம் அனுப்பிவைப்​பார். அங்கிருந்து காப்​பிஸ்ட் எனப்​படும் நகலகப் பிரிவுக்கு சென்று பின்னர், அங்கிருந்து டெஸ்​பேட்ஜ் பிரிவுக்​குச் செல்​லும்.

அதன்​பிறகு​தான் சம்பந்​தப்​பட்ட பிரிவு​களுக்கு அந்த பண்டல்செல்​லும். உயர் நீதி​மன்​றத்​தில் ஆங்கில ரெக்​கார்டு ரூம், வெர்​னாகுலர் ரெக்​கார்டு என 2 பாது​காப்பு அறைகள் உள்ளன. பழைய வழக்​கு​களின் கட்டுகள் என்றால் அதற்கு தனியாக அறை உள்ளது. இவ்வாறு கட்டுகள் ஒரு பிரி​வில் இருந்து மற்றொரு பிரிவுக்கு செல்​லும் போது அவற்றை கண்காணிக்க ‘மூவ்​மெண்ட் ரிஜிஸ்​டர்’ கையாளப்​படு​கிறது.

இதன்​மூலம் அந்த கேஸ் பண்டல் எங்கு இருக்​கிறது என்பதை எளிதாக கண்டறிய முடி​யும். இதையும் மீறி சில நேரங்​களில் கேஸ்கட்டுகள் மாயமாவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சிக்​கல்களை தவிர்க்க நீதி​மன்​றத்​தின் அன்றாடப் பணிகளை டிஜிட்டல் மயமாக்கி பென்​-டிரைவ், லேப்​-டாப், மெகா ஸ்கிரீன் மூலமாக நவீன தொழில்​நுட்​பத்​தின் பலனாக உயர் நீதி​மன்ற வழக்கு விசாரணை ஹை-டெக் வடிவம் பெற்றுள்​ளது.

குறிப்பாக நீதிப​திகள் வழக்கு ஆவணங்களை ‘டச் ஸ்கிரீனிலேயே பார்த்து எளிதாக விசாரணை மேற்​கொள்​ளும் வகையில் டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெகக​னேஷன்’ தொழில்​நுட்பம் தற்போது சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் சில அமர்​வு​களில் சோதனை முறை​யில் அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்காக நீதிப​தி​களும், வழக்​கறிஞர்​களும் பார்​வையிட தனித்​தனியாக மெகா ‘டிஜிட்​டல்- ஸ்கிரீன்​கள்’ நீதி​மன்ற அறைகளில் வைக்​கப்​பட்​டுள்ளன. இதன்​மூலம் நீதிபதி வழக்​கின் எந்த ஆவணங்​களைப் பார்க்​கிறார், எந்த பக்கத்​தில் இருந்து கேள்வி எழுப்பு​கிறார் என்பதை வழக்​கறிஞர்கள் ஸ்கிரீனில் பார்​வை​யிட்டு எளிதாக பதிலளிக்க முடி​யும்.
அதேபோல நீதிபதி வாய்​மொழியாக பிறப்​பிக்​கும் தீர்ப்பு கணினி​யில் தானாக பதிவாகும் என்ப​தால் நீதிப​தி​களின் பிஏ-க்கள் தீர்ப்பு விவரங்களை அவசர கதியில் சுருக்​கெழுத்​தில் குறிப்​பெடுத்து பின்னர் அதை கணினி​யில் பதிவேற்றம் செய்​யும் நேரம் மிச்​ச​மாகும். இந்த தொழில்​நுட்​பத்​தால் தீர்ப்புகளை விரைவாக சரிபார்த்து அவற்றை உடனுக்​குடன் பதிவேற்றம் செய்ய முடி​யும்.

இதுதொடர்பாக மூத்த வழக்​கறிஞர்கள் சிலர் கூறிய​தாவது: உலகம் முழு​வதும் ஏஐ (ஆர்ட்​டிபிஷியல் இண்டலிஜென்ஸ்) எனப்​படும் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்பம் தான் தற்போது பிரதானமாக இருந்து வருகிறது. அனைத்து துறை​களி​லும் இந்த ஏஐ தொழில்​நுட்பம் பயன்​படுத்​தப்​பட்டு வரும் நிலை​யில் நீதித்​துறை​யிலும் இந்த தொழில்​நுட்​பத்தை விரை​வில் அறிமுகம் செய்ய வேண்​டும். குறிப்பாக அகில இந்திய அளவிலான தீர்ப்புகளை மேற்​கோள் காட்டு​வதற்​கும், கேஸ்​-லாஸ் எனப்​படும் முன்​மா​திரி தீர்ப்புகளை பட்டியலிட​வும் இந்த ஏஐ தொழில்​நுட்பம் வழக்​கறிஞர்​களுக்​கும், நீதிப​தி​களுக்​கும் பேருதவி புரி​யும். அதன் முன்னோட்​டமாக தற்போது டிஜிட்​டல் ‘வாய்ஸ் - ரெகக​னேஷன்’ தொழில் நுட்​பத்தை நீ​திப​தி​கள் பயன்​படுத்துவது வர​வேற்​கத்​தக்​கது. இதன்​மூலம் வழக்கு ​விசாரணை இல​கு​வாகும். ​கால​விர​யம் மட்டுமின்றி நீ​தி​மன்ற பணிச்​சுமை​யும், நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்கை​யும் வெகுவாக குறை​யும். இவ்​வாறு தெரி​வித்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in