Last Updated : 19 Feb, 2025 08:13 AM

4  

Published : 19 Feb 2025 08:13 AM
Last Updated : 19 Feb 2025 08:13 AM

‘பரிசுன்னு சொல்லி பாழான மனைகளை எங்க தலையில கட்டிட்டாங்க!’ - விசும்பும் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர்

2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரின் சாகசத்தை பாராட்டி, அவர்களுக்கு இரட்டிப்பு பதவி உயர்வுகளைக் கொடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. கூடவே, 752 அதிரடிப்படை வீரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் இலவசமாக வீட்டு மனைகளையும் பரிசாக வழங்கினார்.

அதன்படி, சேலம் மாவட்​டத்தில் 40 பேருக்கு பொன்னம்​மாபேட்​டையில் உள்ள சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தலா 2 ஆயிரம் சதுர அடி வீதம் வீட்டு மனைகள் ஒதுக்​கப்​பட்டன. ஆனால், 1991-ல் உருவாக்​கப்பட்ட சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அந்த மனைப்​பிரி​வானது கழிவு நீர் சூழ்ந்தும் குப்பை மேடாகவும் மாறியுள்ளது.

இம்மனைப் பிரிவை மாநகராட்சி வசம் ஒப்படைப்​பதில் வீட்டுவசதி வாரியத்​துக்கும் சேலம் மாநகராட்​சிக்கும் இடையில் ஈகோ யுத்தம் நடப்பதால் அங்கு எவ்வித உட்கட்​டமைப்பு வசதிகளும் ஏற்படுத்​தப்​ப​டாமல் கிடக்​கிறது. இதனால், வீடு கட்டவே லாயக்கற்ற நிலையில் உள்ள மனைகளை பரிசு என்ற பெயரில் தங்கள் தலையில் கட்டி​விட்டதாக மனைகளைப் பெற்ற அதிரடிப் படையினர் புலம்​பு​கிறார்கள்.

இதுகுறித்து பேசிய அவர்கள், “ஜெயலலிதா இந்த மனைகளை எங்களுக்கு வழங்கி 20 வருடம் ஆகப் போகிறது. இந்த மனைகள் குப்பை மேடாக, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியே கழிவு நீர் குட்டையாக இருப்​பதால் எங்களால் வீடுகட்​டவும் முடிய​வில்லை. முதல்வர் ஸ்டாலின் மனமிறங்கி எங்களுக்கு மட்டுமல்லாது இங்கு வீட்டுமனைகளை பெற்ற மற்றவர்​களுக்கும் பலனளிக்கும் விதமாக மனைகளை மறுசீரமைத்துக் கொடுக்க வேண்டும்” என்றனர்.

இந்த மனைப்​பிரிவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் என்ன பிரச்சினை என சேலம் மாநக ராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்ஜித் சிங்கிடம் கேட்டதற்கு, “1991-ல் உலக வங்கி கடனுதவியில் சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனைகள் உருவாக்​கப்​பட்டது. இத்திட்டம் முடிந்த கையோடு 1994-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த மனைப்​பிரிவை மாநகராட்சி வசம் ஒப்படைத்து இருக்க வேண்டும்.

ஆனால், இதுவரை அவர்கள் ஒப்படைக்க​வில்லை. எங்கள் வசம் ஒப்படைக்காத மனைப்​பிரிவில் நாங்கள் எப்படி அடிப்படை வசதிகளை உருவாக்க முடியும்? இது சம்பந்தமாக டிஆர்ஓ, வீட்டு வசதி வாரிய அதிகாரி​களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்​பட்டது.

அதில் எடுக்​கப்பட்ட முடிவின் படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மாநகராட்சி வசம் சீலாவரி குடியிருப்பு மனைகளை ஒப்படைக்க அரசின் அனுமதியைப் பெறுவதற்கான கோப்புகள் சென்னை சிஎல்​ஏ-வின் பரிந்​துரைக்கு அனுப்பி வைக்கப்​பட்​டுள்ளது. ஆறு மாதத்​துக்குள் எங்கள் வசம் மனைப் பிரிவு ஒப்படைக்​கப்​பட்​டால், அங்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்​கும்” என்றார்.

இது தொடர்பாக பேசிய சேலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் கணேசன், “அந்த மனைப் பிரிவை மாநகராட்சி வசம் ஒப்படைக்க தேவையான நடவடிக் கைகள் எடுக்​கப்​பட்​டுள்ளது. தற்போது, அங்கு 39 தெரு விளக்​குகள் போடப்​பட்​டுள்ளது. விரைவில் அந்தப் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்​கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x