Published : 17 Feb 2025 12:31 AM
Last Updated : 17 Feb 2025 12:31 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி: திமுக நிர்வாகி ராஜினாமா

கே.பி.சாமி, தோப்பு வெங்​கடாசலம்

ஈரோடு: அதிமுக முன்​னாள் அமைச்​சருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்​கியதைக் கண்டித்து பெருந்​துறை ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.சாமி ராஜினாமா செய்​துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்​துறையைச்​சேர்ந்த தோப்பு வெங்​கடாசலம் அதிமுக ஆட்சி​யில் அமைச்​சராகப் பதவி வகித்​தார். கடந்த சட்டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக​வில் வாய்ப்பு வழங்​காத​தால் சுயேச்​சை​யாகப் போட்​டி​யிட்டு தோல்​வியடைந்​தார். பின்னர் அவர் திமுக​வில் சேர்ந்​தார். இந்நிலை​யில், அண்மை​யில் அவர் திமுக ஈரோடு மத்திய மாவட்டச் செயலா​ளராக அறிவிக்​கப்​பட்​டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரி​வித்து, பெருந்​துறை ஒன்றிய திமுக செயலா​ளராகப் பதவி வகித்து வந்த கே.பி.சாமி ராஜினாமா செய்​துள்ளார். இதுகுறித்து திமுக நிர்​வாகிகள் சிலர் கூறும்​போது, “பெருந்​துறை​யில் தோப்பு வெங்​கடாசலத்​துக்கு எதிராக பல ஆண்டு​களாக நாங்கள் அரசியல் செய்து வருகிறோம். இந்நிலை​யில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்​கப்​பட்​டுள்ளது அதிர்ச்​சியை ஏற்படுத்து​கிறது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பெருந்​துறை ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி ராஜினாமா செய்து, கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்​.அவரை சமாதானப்​படுத்​தும் முயற்சி நடந்து வருகிறது. இதேபோல, நிர்​வாகிகள் பலரும் தங்​கள் எ​திர்ப்பை தெரி​வித்​துள்ளனர்” என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x