Last Updated : 15 Feb, 2025 05:14 AM

1  

Published : 15 Feb 2025 05:14 AM
Last Updated : 15 Feb 2025 05:14 AM

காசி தமிழ் சங்கமம்: வேற்றுமையில் ஒற்றுமையின் கொண்டாட்டம்

​காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்​கு​கிறது. இந்தியா​வின் வேற்றுமை​யில் ஒற்றுமை என்ப​தற்கு மேலும் ஒரு சான்று. இன்று முதல் பிப். 24 வரை நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாச்சார விழா, நாட்​டின் மிகத் தொன்​மையான ஆன்மிக வளம் கொண்ட காசி​யை​யும், தமிழகத்​தை​யும் ஒன்றிணைக்​கிறது. நிலப்பரப்​பைக் கடந்து ஆழ்ந்த நாகரீகப் பிணைப்பை வளர்க்​கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி​யால் தொடங்கி வைக்​கப்​பட்ட காசி தமிழ்சங்கமம் இந்த ஆண்டு 3-வதுகலாச்சார நிகழ்வாக நடைபெறுகிறது. சுதந்​திரத்​தின் அமிர்தப் பெரு​விழா​வின் ஒரு பகுதியாக மத்திய அரசால் தொடங்​கப்​பட்ட இது, ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்​வைக் கொண்​டுள்​ளது. காசி தமிழ் சங்கமம் 3.0 தமிழகத்​தின் உயிரோட்​டமான வளமான பாரம்​பரி​யம், வாராணசி​யின் காலத்​தால் அழியாத மரபுகள் ஆகிய​வற்றை வலுப்​படுத்து​கிறது.

இந்தியா​வின் மிகவும் மதிக்​கத்​தக்க முனிவரான மகரிஷி அகத்​தியரை இந்த 3-வது ஆண்டு நிகழ்வு நினை​வு​கூரு​கிறது. அயோத்​தி​யில், ராமபிரானின் பிராணப்​பிர​திஷ்டை செய்த பின், நடைபெறும் முதலாவது சங்கமம் என்பதும் மகா கும்​பமேளா​வுடன் இணைந்தது என்ப​தா​லும் தனி முக்​கி​யத்துவம் பெறுகிறது.

இந்த சங்கமத்​துக்கு தமிழகத்​தில் இருந்து ஆயிரம் பிரதி​நி​திகளை அழைத்துவர அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பல்வேறு மத்தியப் பல்கலைக்​கழகங்​களைச் சேர்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவர்​களும் இதில் இணைகின்​றனர். இளைஞர்கள் பங்கேற்​ப​தற்கு சிறப்​புக் கவனம் செலுத்​தப்​படும். இதில் பங்கேற்​போர் நடன நிகழ்வு​கள், இசை, காசி​யை​யும் தமிழகத்​தை​யும் சேர்ந்த அழகிய கலைக் கண்காட்சி ஆகிய​வற்​றை கண்டு​களிப்​பார்​கள்.

மகாகவி பாரதி​யாரின் இல்லம் அமைந்​துள்ள காசி​யின் அனுமன் படித்​துறை புனித யாத்​திரை தலமாக உள்ளது. 200 ஆண்டு​களுக்​கும் மேலாக காசி விஸ்​வநாதர் ஆலயத்​தில் ஸ்ரீ காசி நாட்டுக்​கோட்டை நகரத்​தார் சத்திரம் பலவகையான வசதிகளை செய்து தருகிறது. தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீது பிரதமர் நரேந்திர மோடி, ஒப்புமை இல்லாத அர்ப்​பணிப்பை கொண்​டுள்​ளார். சிங்​கப்​பூரில் திரு​வள்​ளுவர், கலாச்சார மையத்தை அமைத்​தது, ஜகார்த்தா முருகன் கோவில் மகா கும்​பாபிஷேகத்​தில் அவரது ஈடுபாடு இதனை மேலும் உறுதி செய்​கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமை​யின் கீழ் நமது தேசத்​தின் வரலாற்றில் அனைத்து மொழி, அனைத்து பாரம்​பரியம், அனைத்து சமூகம் ஆகிய​வற்றுக்கு உரிய அங்கீ​காரம் அளிப்பதை உறுதி செய்து அனைவரை​யும் உள்ளடக்கிய கலாச்​சாரப் பாதை​யில், இந்தியா தொடர்ந்து நடைபோடு​கிறது. காசி தமிழ் சங்கமம் 2025-ஐ நாம் கொண்​டாடும் நிலை​யில், நமது பன்முகத்​தன்மை, போற்று​தலுக்கு உரிய பொக்​கிஷமாக உள்ளது என்​பதை நாம் நினை​வில் ​கொள்ள வேண்​டும். ​காசி – தமிழகம் இடையேயான ஒற்றுமை பாரதத்​தின் ஒற்றுமை​யாகும். இதனை இன்று மட்டுமல்​ல, எப்​போதும்​ ​கொண்​டாடுவோம்​.

-டாக்டர் எல். முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை,
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x