Published : 16 Jul 2018 08:38 AM
Last Updated : 16 Jul 2018 08:38 AM
பைக்கில் லிப்ட் கொடுத்த ஜவுளிக்கடை ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப் பட்டார்.
நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மோசஸ் (19). இவர் அசோக்நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வழக்கம்போல் பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். போகும் வழியில் இளைஞர் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டார். மோசஸும் பரிதாபப்பட்டு தனது பைக்கில் அந்த இளைஞரை ஏற்றிக் கொண்டார். அசோக் பில்லர் அருகே சிறிது தூரம் சென்றதும் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், கத்திமுனையில் மோசஸின் செல் போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து மோசஸ் தனது பைக்கில் அந்த இளைஞரை விரட்டிச்சென்று மடக்கினார். அந்த வழியாகச் சென்ற பொது மக்களும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் கோயம்பேட்டைச் சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT