Last Updated : 11 Feb, 2025 04:29 PM

5  

Published : 11 Feb 2025 04:29 PM
Last Updated : 11 Feb 2025 04:29 PM

4 லட்சம் பயணிகளும்... 4 பெஞ்சும்..!  - இது சென்னை சென்ட்ரல் புறநகர் முனையம்

சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் தரையில் அமர்ந்துள்ள பயணிகள்.

தினசரி 4 லட்சம் பயணிகள் வந்து செல்​லும் சென்னை சென்ட்ரல் புறநகர் முனை​யத்​தில், 4 பெஞ்​சுகள் மட்டுமே உள்ள​தால், பயணிகள் தரையில் அமரும் நிலை ஏற்பட்​டுள்​ளது. இதனால், ரயில் ஏற வரும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்​றனர். சென்னை சென்ட்ரல் புறநகர் முனை​யத்​தில் இருந்து ஆவடி, திரு​வள்​ளூர், அரக்​கோணம், திருத்​தணி, கும்​மிடிப்​பூண்டி, நெல்​லூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு தினசரி புறநகர் மின்சார ரயில்கள் இயக்​கப்​படு​கிறது.

வேலை, கல்வி, சுற்றுலா, மருத்​துவம் உள்ளிட்ட பல்வேறு தேவை​களுக்காக பொது​மக்கள் தினமும் இந்த ரயில் சேவைகளை பயன்​படுத்தி வருகின்​றனர். நாள்​தோறும் சுமார் 4 லட்சத்​துக்​கும் மேற்​பட்ட பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலை​யத்​தைப் பயன்​படுத்தி வருகின்​றனர்.

இந்நிலை​யில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனைய வளாகத்​தில் உள்ள பொதுத் தளத்​தில் பயணிகள் அமரு​வதற்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்​தப்​பட​வில்லை. வெறும் 4 பெஞ்​சுகள் மட்டுமே போடப்​பட்​டுள்ள​தால், பயணிகள் தரையில் அமரு​கின்​றனர். இதனால், ரயில் ஏற வரும் பயணி​களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

இதுகுறித்து, பயணிகள் சிலர் கூறிய​தாவது: பல்வேறு ஊர்களுக்​குச் செல்​வதற்காக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்​துக்கு தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்​கின்​றனர். ஆனால், இவ்வாறு வரும் பயணிகள் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. குறைவான இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ள​தால், பலர் தரையில் அமரு​கின்​றனர். குறிப்​பாக, வழியில் அமர்ந்து கொள்​கின்​றனர்.

இதனால், ரயில் ஏற வரும் பயணி​களுக்​கும், இறங்​கிச் செல்​லும் பயணி​களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. பலர் ரயிலை தவறவிடும் நிகழ்வு​களும் நடைபெறுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ்​காந்தி அரசு பொது​மருத்​துவ​மனைக்கு சிகிச்​சைக்காக வந்து செல்​லும் நோயாளி​களும் அமர்​வதற்கு இருக்கை கிடைக்​காமல் தவிக்​கின்​றனர்.

மேலும், கடந்த சில மாதங்​களாக அரக்​கோணம், கும்​மிடிப்​பூண்டி மார்க்​கத்​தில் இயக்​கப்​படும் மின்சார ரயில்கள் தினமும் காலதாமதமாக இயக்​கப்​படு​வ​தால் ரயில் ஏறவரும் பயணிகள் கால்​கடுக்க ரயில் நிலையத்தில் காத்து நிற்​கின்​றனர். அப்போது, அமர்​வதற்கு இருக்கை கிடைக்​காமல் அவதிப்​படு​கின்​றனர்.

மேலும், சில பயணிகள் தரையில் உட்கார்ந்து கொண்டு வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை அங்கேயே வைத்து உண்கின்​றனர். உண்ட பிறகு அந்த இடத்தை அவர்கள் முறையாக சுத்​தப்​படுத்துவது கிடையாது. இதனால் சுகாதார சீர்​கேடும் ஏற்படு​கிறது.

அத்துடன், அங்கு கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. மேலும், ரயில்வே அதிகாரி​களும் அவ்வ​போது இங்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்​தால் கீழ்​நிலை அதிகாரிகள் பயந்து பயணி​களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வார்கள்.

ஆனால், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வது கிடை​யாது. எனவே, பயணி​களின் நலன் கருதிபோதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்​டும். இவ்வாறு பயணிகள் கூறினர். இப்பிரச்​சினை தொடர்பாக ஏற்கெனவே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளி​யான​போது, அதிகாரிகள் கணக்​குக்காக 4 பழைய சேர்களை கொண்டு வந்து ​போட்​டனர்.

அதை​யும் சிறிது நாட்​களில் ​திருப்பி எடுத்து சென்​று ​விட்​டனர் என்பது குறிப்பிடத்​தக்​கது. இத​னால், ர​யில்வே நிர்​வாகம் பயணிகளை துச்​சமாக நினைக்​கிறதா என சமூக ஆர்​வலர்​கள் கேள்​வி எழுப்புகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x