இயக்குநர் மணிரத்னம் நலமுடன் இருக்கிறார்; மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை: அப்போலோ நிர்வாகம்

இயக்குநர் மணிரத்னம் நலமுடன் இருக்கிறார்; மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை: அப்போலோ நிர்வாகம்
Updated on
1 min read

இயக்குநர் மணிரத்னம் நலமுடன் இருக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர் மணிரத்னம். தற்போது சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 26) மாலை இயக்குநர் மணிரத்னத்திற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் திரையுலகினர் மத்தியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து “வழக்கமான பரிசோதனைக்கு மட்டுமே மணிரத்னம் அப்போலோ மருத்துமனைக்கு சென்றார்” என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில் “தமிழ்த்திரை உலகில் மிகப் பிரபலமான இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துமனைக்கு பரிசோதனைக்காக இன்று (ஜூலை 26)  வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைக்குப் பின் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அவர் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in