Last Updated : 10 Feb, 2025 06:44 AM

3  

Published : 10 Feb 2025 06:44 AM
Last Updated : 10 Feb 2025 06:44 AM

ரூ.1 கோடியும் கொடுக்கவில்லை; அரசு வேலையும் தரவில்லை - மறைந்த அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மனைவி அனுராதா குற்றச்சாட்டு

அனுராதா மற்றும் ஜெ.சங்​குமணி

சென்னை: அரசு மருத்​துவர்​களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்​கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்​படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்​துவர் லட்சுமி நரசிம்​மன். இவர் கடந்த 2020 பிப்​.6-ம் தேதி உயிரிழந்​தார்.

இதுவரை இந்த அரசாணை​யும் அமலாக​வில்லை. இந்த பின்னணி​யில் ‘மருத்​துவர் லட்சுமி நரசிம்​மனின் உயிர்த் தியாகத்​துக்கு மதிப்​பில்​லை​யா?’ என்ற தலைப்​பில் அரசு மருத்​துவர்​களுக்கான சட்டப் போராட்​டக்​குழு தலைவர் எஸ்.பெரு​மாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 7-ம் தேதி வெளி​யானது.

இதற்கு மறுப்பு தெரி​வித்து, மருத்​துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்​குநர் ஜெ.சங்​குமணி வெளி​யிட்ட அறிக்கை​யில், “அரசாணை 354-ஐ அமல்​படுத்துவது குறித்து மருத்துவ சங்கங்​களுக்​குள் கருத்து வேறு​பாடு காரணமாக தீர்வு எட்டப்​பட​வில்லை. இதுகுறித்து ஒற்றுமை​யுடன் ஒருமித்த கருத்தை தெரி​வித்​தால் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. மறைந்த மருத்​துவர் லட்சுமி நரசிம்மன் வாரிசு​தா​ரர்​களுக்கு பணி வழங்க அமைச்சர் உத்தர​விட்டும், இதுவரை அவர்கள் ஏற்க முன்​வர​வில்லை. மேலும் பணியின்​போது உயிரிழந்த லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட 6 மருத்​துவர்​களின் வாரிசு​தா​ரர்​களுக்கு தலா ரூ.1 கோடி நிதி, கடந்த ஜன.10-ம் தேதி வழங்​கப்​பட்​டது” என தெரி​வித்​திருந்​தார்.

இந்நிலை​யில், மறைந்த லட்சுமி நரசிம்​மனின் மனைவி அனுராதா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை தொடர்பு கொண்டு கூறிய​தாவது: எங்கள் குடும்பத்​துக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்​த​தாக​வும், பணி நியமன ஆணை வழங்​கிய​தாக​வும் மருத்​துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்​குநர் ஜெ.சங்​குமணி தெரி​வித்​துள்ளார். இப்படி உண்மைக்கு மாறான தகவலை, இப்படி வெளிப்​படையாக சொல்​வதற்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது. நான் அவரை தொடர்பு கொண்டு கேட்​டாலும் சரியான விளக்கம் அளிக்க​வில்லை. அப்படியே ரூ.1 கோடி வழங்​கு​வதாக இருந்​தா​லும் அது அரசு பணம் இல்லை. ஒவ்வொரு அரசு மருத்​துவரும் மாதம்​தோறும் தங்கள் ஊதியத்​தில் இருந்து வழங்​கும் தொகை​யாகும்.

எனவே, இந்த விவகாரத்​தில் ரூ.1 கோடி​யும் கொடுக்க​வில்லை. பணிநியமன ஆணையும் வழங்​க​வில்லை. இந்த இரண்​டை​யும் நாங்கள் கோரியதும் இல்லை. உண்மைக்கு மாறான தகவலை தெரி​வித்​ததற்காக நீதி​மன்றம் செல்ல இருக்​கிறேன். எனது கணவரின் இலக்கான அரசாணை 354-ஐ அமல்​படுத்த வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்நிலை​யில், போராட்டக் குழு தலைவர் எஸ்.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட அறிக்கை: மறைந்த லட்சுமி நரசிம்மன் குடும்பத்​துக்கு ரூ.1 கோடி நிதி வழங்​கிய​தாக​வும், அரசு வேலை வழங்க முன்​வந்​த​தாக​வும் ஜெ.சங்​குமணி கூறியது முற்றி​லும் தவறான தகவல். அரசாணை 354-ஐ அமல்​படுத்த அனைத்து அரசு மருத்​துவர் சங்கங்​களுமே வலியுறுத்​தி​யுள்ளன. ஒருமித்த கருத்து இல்லை என்பது அப்பட்​டமாக தவறான தகவல். இதனை உடனடியாக அவர் திரும்ப பெற வேண்​டும். இல்லா​விட்​டால் மிகப்​பெரிய போராட்​டத்தை முன்னெடுப்​போம். முதல்வர் தலையிட்டு அரசாணை 354-ஐ நடைமுறைப்​படுத்த வேண்​டும்.

எதிர்க்​கட்சி தலைவராக இருந்த​போது எங்கள் போரட்​டத்​துக்கு ஆதரவு தெரி​வித்த அவர், தற்போது ஆட்சிக்கு வந்தும் இதுவரை தன் தந்தை​யின் அரசாணையை நிறைவேற்​ற​வில்லை. உயர் நீதி​மன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்​ற​வில்லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்ளார்.

இந்த ​விவ​காரத்​தில் மருத்​துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்​குநர் மருத்​துவர் ஜெ.சங்​குமணி​யின் ​விளக்​கத்​துக்காக ​காத்​திருக்​கிறோம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x