Published : 10 Feb 2025 06:27 AM
Last Updated : 10 Feb 2025 06:27 AM

தமிழகத்தில் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்​தில் இன்று​முதல் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு:

தமிழகம், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களில் இன்று​முதல் 15-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளை​யில் லேசான பனிமூட்டம் காணப்​படும். ஞாயிற்றுக்​கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான வெப்ப அளவு​களின்​படி, சமவெளி பகுதி​களில் அதிகபட்​சமாக ஈரோட்​டில் 34.6 டிகிரி செல்​சி​யஸ், கரூர் பரமத்​தி​யில் 15.5 டிகிரி செல்​சியஸ் பதிவாகி​யுள்​ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். காலை வேளை​யில் பொதுவாக லேசான பனி மூட்டம் நிலவக்​கூடும். அதிகபட்ச வெப்​பநிலை 33 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 23 டிகிரி செல்​சியஸை ஒட்டி இருக்​கக்​கூடும். மீனவர்​களுக் கான எச்சரிக்கை ஏதும் இல்லை. இவ்​வாறு செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x