Published : 08 Feb 2025 12:44 AM
Last Updated : 08 Feb 2025 12:44 AM

நி​தியும் கிடையாது, நீதியும் இல்லை; தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு: முதல்வர் குற்றச்சாட்டு

திருநெல்​வேலி: நிதி​யும் கிடை​யாது, நீதி​யும் இல்லை என்று மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்​பதாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறினார்.

நெல்​லை​யில் நேற்று நடைபெற்ற அரசு விழா​வில் ரூ.8,772 கோடி மதிப்​பிலான முடிவுற்ற திட்​டங்கள் மற்றும் புதிய திட்​டங்​களைத் தொடங்கி​வைத்​தும், பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவிகளை வழங்​கி​யும் முதல்வர் பேசி​ய​தாவது: 2023-ல் நெல்லை, தென்​காசி, குமரி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் கனமழை​யால் ஏற்பட்ட கடும் பாதிப்பு​களில் இருந்து மீள்​வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்​டோம். ஆனால், இடைக்கால நிதி​யுதவியைக் கூட வழங்​க​வில்லை. நீதி​மன்​றத்தை நாடிய பின்னரே ரூ.276 கோடி மட்டும் வழங்​கினர். தமிழகம் கேட்ட ரூ.37,904 கோடி​யில் ஒரு சதவீதத்​தைக் கூட மத்திய அரசு கொடுக்க​வில்லை. ஆனாலும், மாநில அரசின் நிதி​யில் பணிகளை மேற்​கொண்​டோம்.

நடப்​பாண்டு மத்திய பட்ஜெட்​டிலாவது நிதி ஒதுக்​கப்​படும் என எதிர்​பார்த்​தோம். அதுவும் இல்லை. தமிழகத்​துக்கு நிதி​யும் கிடை​யாது, நீதி​யும் இல்லை என்று ஒதுக்​கி​விட்​டார்​கள். தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சிக்​கிறது. பாஜக கூட்​ட​ணி​யில் இருக்​கும் மாநிலங்​களுக்​கும், தேர்தல் வரும் மாநிலங்​களுக்​கும் மட்டும்​தான் நிதி ஒதுக்கு​வார்​களா?

தேர்தல் நேரத்​தில் வாக்​கு​கேட்க மட்டும் தமிழகத்​துக்கு வந்தால் போதும் என்று கருதுகிறார்​கள். பொதுவாக திருநெல்​வேலி அல்வா உலகப் புகழ்​பெற்​றது. ஆனால், இப்போது மாநிலங்​களுக்கு மத்திய அரசு தரும் அல்வா​தான் அதைவிட புகழ்​பெற்​றதாக இருக்​கிறது. ஆனால், மத்திய அரசைப் பொருட்​படுத்​தாமல், நமக்கு நாமே என்ற பாணி​யில் தமிழகத்தை மேம்​படுத்தி வருகிறோம். அதனால்​தான், மத்திய அரசு வெளி​யிடும் எல்லா புள்​ளி​விவரங்​களி​லும் தமிழகம் முன்னணி​யில்இருக்​கிறோம். சென்னை, கோவை மட்டுமின்றி, தென் தமிழகத்​திலும் பிரம்​மாண்ட தொழிற்​சாலைகளை அமைத்து, லட்சக்​கணக்கான இளைஞர்​கள், பெண்​களுக்கு வேலை​வாய்ப்புகளை உருவாக்க வேண்​டும் என்பது​தான் எனது இலக்கு. அடுத்த 5 ஆண்டு​களில் தென் மாவட்​டங்​களின் வளர்ச்சி புலிப் பாய்ச்​சலாக இருக்​கும்.

இப்படி ஒரு பக்கம் நாங்கள் உழைத்​துக் கொண்​டிருக்​கும்​போது, மறுபக்கம் தமிழக வளர்ச்​சிக்கு எதிரானவர்கள் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்​கள். இவ்வாறு முதல்வர் பேசினார். விழா​வில், சட்டப்​பேர​வைத் தலைவர் மு.அப்​பாவு, அமைச்​சர்கள் துரை​முரு​கன், கே.என்​.நேரு, சாத்​தூர் ராமச்​சந்​திரன், பெரியகருப்​பன், ராஜகண்​ணப்​பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, எம்.பி. ராபர்ட் புரூஸ், எம்எல்​ஏ-க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்​திரன், ரூபிமனோகரன், மேயர் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர். நெல்லை ஆட்சியர் கா.ப.​கார்த்தி​கேயன் வரவேற்​றார்.

சைகை​யால் மறுப்பு... விழா மேடை​யில் பாஜக சட்டப்​பேர​வைக் குழு தலைவர் நயினார் நாகேந்​திரனுக்கு முன்​வரிசை​யில் இடம் அளிக்​கப்​பட்டு இருந்​தது. முதல்வர் பேசும்​போது, “கனமழை​யால் தென்​மாவட்​டங்கள் பாதிக்​கப்​பட்​ட​போது, மத்திய அமைச்சர்கள் பார்​வையிட வந்தார்​கள். ஆனால், அவர்கள் இடைக்கால நிதி​யுதவியைக்கூட வழங்க ஏற்பாடு செய்ய​வில்லை. இந்த உண்மை நயினார் நாகேந்​திரனுக்​குத் தெரி​யும். ஆனால், அவர் பேசமாட்​டார், நீங்கள் பேசுங்கள் என்று எனக்கு அனுமதி கொடுப்​பார்” என்றார். உடனே நயினார் நாகேந்​திரன் தனது கையை அசைத்து, முதல்வர் குறிப்​பிடு​வதுபோல இல்லை என்பது​போல் சைகை​யால் மறுப்புத் தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x