Published : 07 Feb 2025 08:36 AM
Last Updated : 07 Feb 2025 08:36 AM

அமைச்​சரின் உதவியாளர் மீது கொடுத்த புகாருக்கு நடவடிக்கை இல்லை! - பின்னணி என்ன?

அமைச்​சர்களை விட பல நேரங்​களில் அவர்களது உதவியாளர்கள் தான் ஏடாகூடமாக எதையாவது செய்து கெட்ட பெயரைச் சம்பா​திப்​பார்கள். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.​சாமி​நாதனின் உதவியாளர் வினோத்​கு​மாரும் அப்படித்தான் ஒரு சிக்கலில் மாட்டி இருக்​கிறார்!

கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே​யுள்ள இடையன் ​கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாத லாரியில் ஒரு கும்பல் கிராவல் மண் கடத்தியது. விஷயமறிந்து ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு ஆய்வாளரான சிவசக்தி, அந்தக் கும்பலை பிடித்து விசாரணை நடத்தி​னார்.

அப்போது, பிடிபட்ட நபர்களுக்கு ஆதரவாக போனில் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் நேர்முக உதவியாளர் வினோத்​கு​மார், அந்த நபர்களை விடுவிக்​கும்படி வலியுறுத்​தி​னா​ராம். இது பெரும் சர்ச்​சையான நிலையில், வினோத்​குமார் இடமாற்றம் செய்யப்​பட்​டார். அதேசமயம், கடத்தல்​காரர்களை பிடித்த ஆய்வாளரான சிவசக்​தியும் பணியிடம் மாற்றப்​பட்​டதால் விவசா​யிகள் போராட்​டத்தில் குதித்​தனர். இதையடுத்து சிவசக்​தியின் பணி மாறுதல் ரத்து செய்யப்​பட்டது.

இதையடுத்து குண்டடம் காவல் நிலையத்​தில், கிராவல் மண் கடத்தல் தொடர்​பாக​வும், ஆய்வாளரை மிரட்டிய ஆளுங்​கட்​சி​யினர் மற்றும் அமைச்​சரின் நேர்முக உதவியாளர் வினோத்​குமார் மீதும் புகார் அளிக்​கப்​பட்டது. ஆனால், 11 மாதங்கள் கடந்த பிறகும் இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்க​வில்லை. இதையடுத்து, புகார் கொடுத்து ஓராண்டு நெருங்​குவதை நினைவூட்டும் விதமாக இந்த மாதம் விழா எடுக்க திட்ட​மிட்​டுள்ளனர் விவசா​யிகளும், சமூக ஆர்வலர்​களும்!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக விவசா​யிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்பு​ணர்வு அணி மாநிலச் செயலா​ள​ரும், புகார்​தா​ரருமான சதீஷ்குமார், “பதிவெண் கூட இல்லாத லாரியை கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர். நடவடிக்கை எடுக்க முயற்​சித்த அதிகாரி சிவசக்தி, பணி செய்ய​வி​டாமல் தடுக்​கப்​பட்​டுள்​ளார்.

அவரை தகாத வார்த்​தைகளால் திட்டி, மிரட்டி, அச்சுறுத்தி இருக்​கிறார்கள். இதில் சம்பந்​தப்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்​சரின் உதவியாளர் வினோத்​குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்​தோம். ஆனால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க​வில்லை.

பிரச்சினை நடந்த சமயத்தில் கண் துடைப்பாக வினோத்​குமாரை அவிநாசி வருவாய் ஆய்வாளராக மாற்றி​னார்கள். எட்டு மாதம் கழித்து மறுபடியும் அவரையே அமைச்​சருக்கு நேர்முக உதவியாளராக நியமித்து​விட்​டார்கள். இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருக்​கின்றன.

புகார் கொடுத்து கிட்டத்தட்ட ஓராண்​டாகியும் ஆளும் கட்சி​யினர் மீதும் அமைச்​சரின் உதவியாளர் மீதும் போலீஸார் எஃப்ஐஆர் கூட போடவில்லை. அவர்களுக்கு இதை நினைவூட்டும் விதமாக விவசா​யிகளும், சமூக ஆர்வலர்​களும் நூதனமாக விழா எடுக்க இருக்​கிறோம்” என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெற செய்தித்துறை அமைச்சர் மு.பெ.​சாமி​நாதனைத் தொடர்பு கொண்டோம். மறு முனையில் பேசிய அவரது மற்றொரு மூத்த உதவியாளர் செல்ல​முத்து, “அந்தப் பிரச்​சினைக்குப் பிறகு, வினோத்​குமார் அவிநாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்​பட்​டார்.

ஆனால், அங்கு பணியில் சேராத அவர், நீண்ட விடுப்பில் இருந்​தார். இப்போது மீண்டும் டிசம்பர் மாதத்​திலிருந்து அமைச்​சரின் உதவியாளராக பணிக்குத் திரும்​பி​யுள்​ளார். மற்றவற்றை நேரில் பேசிக்​கொள்​ளலாம்” என்று சொல்லி​விட்டு இணைப்பைத் துண்டித்​தார்.

அமைச்​சரின் உதவியாளர் பணியிடத்​துக்கு எத்தனையோ பேர் தயாராய் இருக்கையில் சர்ச்​சையில் சிக்கி மாற்றப்பட்ட வினோத்​கு​மாரையே மீண்டும் தனக்கு உதவியாளராக அமர்த்திக் கொண்டது ஏன் என்பதை அமைச்சர் ​சாமி​நாதன் ​தான் விளக்க வேண்​டும்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x