திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறி பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்கு

திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறி பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்கு
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பிப். 4-ம் தேதி இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதில், வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். இந்நிலையில், மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in