Published : 25 Jul 2018 07:11 AM
Last Updated : 25 Jul 2018 07:11 AM
விவசாய மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி மற்றும் விவசாயத்தில் சாதனை படைத்துவரும் 5 பேருக்கு தலா ரூ.2 லட்சத்தை நடிகர் சூர்யா வழங்கினார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ், நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, இயக்குநர் இரா.சரவணன், நாயகிகள் சயீஷா, பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு, விஜி சந்திரசேகர், பானு ப்ரியா, மவுனிகா, இயக்குநர் வீர சமர், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விவசாயத்தில் சாதனை படைத்து வரும் நெல் ஜெயராமன், ஆலங்குடி ஆர்.பெருமாள், திருவலஞ்சுழி சேகர், விதை நெல் விஜயலட்சுமி, மரம் தங்கசாமி மகன் கண்ணன் ஆகிய 5 பேருக்கு தலா ரு.2 லட்சத்தை நடிகர் சூர்யா வழங்கினார். மேலும் விவசாய மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதியுதவியையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சூர்யா பேசும் போது, “தமிழ்நாட்டில் நிறைய டாக்டர்கள், இன்ஜினீயர்கள் உள்ள னர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஒருவர் மீது இன்னொரு வர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்புதான். எங்களைவிட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள்தான். அதனால்தான் ரூபாய் 1 கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்’’ என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, “நாங்கள் தற்போது ‘ஸ்டாப்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் ஒயிட் சுகரின் பயன்பாட்டை நிறுத்துவது, மஞ்சளை நமது தினசரி வாழ்கை யில் எடுத்து வருவது போன்ற பணிகளைச் செய்ய திட்டமிட்டுள் ளோம். மேலும் தானியங்களின் முக்கியத்துவும் பற்றியும் இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும்” என்றார்.
விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேரை தேர்வு செய்த ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் அதுபற்றி கூறும்போது, “விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என ஒரு விஷ யத்தை முன்னெடுத்து, இப்படி ஒரு செயலை சூர்யா என்னிடம் ஒப்படைத்தது மகிழ்ச்சி அளிக்கி றது. இந்த 5 பேரும் விவசாயத்தில் சாதனை படைத்தவர்கள். ஆனாலும் பெரிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். தமிழக விவசாய மேம்பாட்டுக்காகவும், விவசாயிகளுக்கு உதவவும் நடிகர் சூர்யா ரூ.1 கோடி அறிவித் திருக்கிறார். இந்த தொகையோடு உதவி நிற்காது. இன்னும் பல கோடி ரூபாய் வரை செலவுசெய்து விவசாயிகளுக்கு உதவ சூர்யா திட்டமிட்டுள்ளார். ஒவ்வொன்றாக அதைச் செயல்படுத்தவுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT