Published : 06 Feb 2025 12:49 AM
Last Updated : 06 Feb 2025 12:49 AM

பர்கூர் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; ஆசிரியர்கள் 3 பேர் கைது - நடந்தது என்ன?

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, பர்கூர் அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி / சென்னை: பர்கூர் அருகே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​ததாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே​யுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த ஒரு மாதமாகப் பள்ளிக்கு வரவில்லை. இது தொடர்பாக தலைமை ஆசிரியை மாணவி​யின் வீட்டுக்கு நேற்று முன்​தினம் மாலை சென்று விசா​ரித்​தார். அப்போது, பள்ளி​யில் பணிபுரி​யும் ஆசிரியர்கள் சிவம்​பட்டி அருகே​யுள்ள எம்.பள்​ளத்​தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (48), பாரூர் அனுமன்​கோ​வில் பள்ளம் சின்னசாமி (57), எருமாம்​பட்டி பிரகாஷ் (37) ஆகியோர் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​ததும், இதில் கருத்தரித்த மாணவிக்​கு, கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்​பாக, குழந்தைகள் நல பாது​காப்பு மையத்​தில், தலைமை ஆசிரியர் புகார் தெரி​வித்​தார். அவர்கள் மாணவி​யின் வீட்டுக்​குச் சென்று விசாரணை நடத்​தினர். மேலும், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​துக்​கும் தகவல் தெரி​வித்​தனர். இதையடுத்து, டிஎஸ்பி முத்து​கிருஷ்ணன் தலைமையிலான போலீ​ஸார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோரை போக்சோ சட்டத்​தின்​கீழ் கைது செய்​தனர். மேலும், மூவரை​யும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உத்தர​விட்​டுள்​ளார். பாதிக்​கப்​பட்ட மாணவிக்​கு, கிருஷ்ணகிரி அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனை​யில் மருத்​துவப் பரிசோதனை செய்​யப்​பட்​டது.

இதனிடையே, தகவலறிந்த மாணவர்​களின் பெற்​றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகை​யிட்டு, சாலை மறியலில் ஈடுபட்​டனர். அவர்கள் கூறும்​போது, “வேறு மாணவிகள் யாரும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார்களா என்று விசாரணை நடத்த வேண்​டும். கைதான 3 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றனர். அவர்களை ச​மா​தானப்​படுத்​திய ​போலீ​ஸார், உரிய நடவடிக்கை எடுப்​ப​தாகக் கூறி, அங்​கிருந்து அனுப்​பிவைத்​தனர்.

ஆட்சியர் விளக்கம்: இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்கு​மார் வெளி​யிட்​டுள்ள செய்திக்​குறிப்​பில், “பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்​பட்டு உள்ளது. சிறுமிக்கு கருக்​கலைப்பு நடந்​ததாக தவறான தகவல்​களைப் பரப்ப வேண்​டாம். சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் காவல் துறை​யினர் விசாரணை மேற்​கொண்டு வருகின்​றனர்” என்று தெரி​வித்​துள்ளார்​.

தலைவர்கள் கண்டனம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்ட சம்பவத்​துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பெண்​களுக்கு எங்கும் பாது​காப்பு இல்லை என்றநிலைக்கு தமிழகத்தை தள்ளியதற்காக திமுக அரசு தலைகுனிய வேண்​டும். பெண்​களுக்குஎதிரான அநீதி​களுக்​குப் பொறுப்​பேற்று, பெண்கள் பாது​காப்பை உறுதி​செய்ய தனக்கு வலிமை​யில்லை என அறிவித்து, முதல்வர் ஸ்டா​லின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்​டும். போச்​சம்​பள்ளி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள மூவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி​செய்ய வேண்​டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை: ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகவும் வருத்​தத்​துக்​குரியது. குழந்தைகள் நல வாரி​யத்தை முழு​மையாக செயல்​பட செய்ய வேண்​டும். மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட திட்​டங்களை பள்ளி​களில் செயல்படுத்த வேண்டும். அனைத்துமாவட்​டங்​களி​லும், குழந்தைகள் நல வாரிய உறுப்​பினர்களை நியமிக்க வேண்​டும். பள்ளி​களில் பெண் குழந்தை​களுக்கான விழிப்பு​ணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x