Published : 05 Feb 2025 06:07 AM
Last Updated : 05 Feb 2025 06:07 AM

சென்னையில் கடும் பனிமூட்டம்: 40-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு

சென்னை புறநகரில் நேற்று கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், தாம்பரத்தில் பனிபடர்ந்த சாலையில் செல்லும் வாகனங்கள். | படம்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்​கப்​பட்டன. சென்னை விமான நிலைய பகுதி​யில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.

இதனால், லண்டனிலிருந்து 317 பயணி​களுடன் சென்னை வந்து கொண்​டிருந்த பிரிட்​டிஷ் ஏர்வேஸ் விமானம், மஸ்கட்​டிலிருந்து 252 பயணி​களுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை பெங்​களூரு​வுக்​கும் மற்றும் ஐதரா​பாத்​திலிருந்து 162 பயணி​களுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், புனே​விலிருந்து 152 பயணி​களுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை திரு​வனந்​த​புரத்​துக்​கும் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்ளன.

குவைத்​திலிருந்து 148 பயணி​களுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்​பிரஸ் விமானம் உட்பட சில விமானங்​கள், சென்னை​யில் தரையிறங்க முடி​யாமல் வானில் வட்டமடித்​துக் கொண்டு இருந்தன.

அதேபோல், சென்னையி​லிருந்து டெல்லி, மதுரை, கோவை, தூத்​துக்​குடி, விஜய​வாடா, அந்த​மான், லண்டன், சிங்​கப்​பூர், துபாய் உள்ளிட்ட பகுதி​களுக்கு செல்​லும் 25-க்​கும் மேற்​பட்ட விமானங்கள் தாமதமாக புறப்​பட்டு சென்றன. வானிலை சீரானதும் வானில் வட்டமடித்​துக் கொண்​டிருந்த விமானங்கள் மற்றும் மற்ற நகரங்​களுக்கு திருப்​பி​விடப்​பட்ட விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னை​யில் தரையிறங்​கின.

பனிமூட்டத்தால் சென்னை விமான நிலை​யத்​தில் அதிகாலை 5.30 மணியி​லிருந்து காலை 9 மணி வரை 40-க்​கும் மேற்​பட்ட வருகை, புறப்​பாடு விமானங்​கள், 2 மணி நேரத்​திலிருந்து 5 மணி நேரம் வரை ​தாமத​மாகிய​தால் ஆ​யிரக்​கணக்கான பயணி​கள் கடும் அவ​திக்​குள்​ளாகினர்​.

வெடிகுண்டு மிரட்டல்: இதற்​கிடையே ஜெர்மன் நாட்​டின் ஃபிராங்க் பார்ட் நகரிலிருந்து சென்னைக்கு 174 பயணி​களுடன் வந்து கொண்​டிருந்த லுப்​தான்ஸா ஏர் லைன்ஸ் விமானத்​தில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​பதாக விமான நிலை​யத்​துக்கு இமெயில் ஒன்று வந்தது. இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலை​யத்​தில் வெடிகுண்டு நிபுணர்​கள், அதிரடிப் படை வீரர்​கள், விமான பாது​காப்புப் படையினர் அதிக அளவில் குவிக்​கப்​பட்​டனர்.

நள்ளிரவு 12.16 மணிக்கு விமானம் தரையிறங்​கியதும், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாது​காப்பு அதிகாரிகள் அந்த விமானத்தை முழு​மையாக சோதனை நடத்​தினர். குண்​டுகள் எதுவும் கிடைக்​காத​தால், இது வழக்​கமான புரளிஎன தெரிய​வந்​தது. வெடிகுண்டு சோதனை காரணமாக அதிகாலை 2 மணிக்கு மீண்​டும் ஜெர்மன் புறப்பட வேண்டி விமானம் அதிகாலை 4 மணிக்கு 265 பயணி​களுடன் புறப்​பட்டுச் சென்​றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x