Published : 05 Feb 2025 12:36 AM
Last Updated : 05 Feb 2025 12:36 AM

இன்பநிதிக்காகவும் பணிபுரிய வேண்டியிருக்கும் என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக திமுக நிர்வாகி அறிவிப்பு

சேலம்: திமுக​வில் இன்பநி​திக்கா​வும் பணியாற்ற வேண்​டி​யிருக்​கும் என்ற நிலை ஏற்பட்​டுள்ள​தால் கட்சியி​லிருந்து விலகினேன் என்று திமுக நிர்​வாகி தெரி​வித்​துள்ளது சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பூமிநாயக்​கன்​பட்​டியை சேர்ந்​தவர் எழில்​அரசன் (35). திமுக நிர்​வாகியான இவர், கட்சி​யில் இருந்து விலகு​வதாக தெரி​வித்​துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலை​தளப் பக்கத்​தில், “சேலம் மத்திய மாவட்ட திமுக​வில் தகவல் தொழில்​நுட்ப அணியில் முன்​னாள் துணை ஒருங்​கிணைப்​பாள​ரும், தற்போதைய ஒன்றியப் பிரதி​நி​தி​யாக​வும் செயல்​பட்டு வந்த நான், கீழ்​காணும் காரணங்​களால் கட்சி​யின் அடிப்படை உறுப்​பினர் உள்ளிட்ட பொறுப்பு​களில் இருந்து விலகிக் கொள்​கிறேன்.

திமுக ஆட்சி​யில் தலித்​களுக்கு பாது​காப்பு இல்லை. கட்சி​யில் எந்த முக்​கி​யத்து​வ​மும் அளிப்​ப​தில்லை. பேரனுக்கு பேனர் வைக்​க​வும், போஸ்டர் ஒட்டும் நிலை​யும் வெகு தொலை​வில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சி​யில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தி​யாளரிடம் எழில் அரசன் கூறியது: 2015-ம் ஆண்டில் இருந்து கட்சி​யில் உள்ளேன். அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். கட்சியில் நிலவும் உட்கட்​சிப் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணு​மாறு பலமுறை திமுக நிர்​வாகி​களிடம் வலியுறுத்​தி​யும், எந்த நடவடிக்கை​யும் எடுக்க​வில்லை. கட்சியி​லிருந்து என்னை நீக்​கு​மாறு கேட்டுக் கொண்​ட போதிலும் கூட, எனது குற்​றச்​சாட்டு​களுக்கு பதில் கிடைக்க​வில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்கவும் இல்லை.

மூத்த தலைவர்கள்... துரை​முரு​கன், எ.வ.வேலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உள்ள நிலை​யில், சினி​மா​வில் நடித்​துக் கொண்​டிருந்த உதயநிதி திடீரென இளைஞரணிச் செயலா​ளர், எம்எல்ஏ, அமைச்​சர், துணை முதல்வர் என குறுகிய காலத்​துக்​குள் உயர்ந்த பொறுப்​புக்கு வந்து​விட்​டார். பல ஆண்டு​களாக கட்சிக்கு உழைப்​பவர்​களுக்கு மரியாதை இல்லை. தற்போது இன்பநி​திக்கு வெளிப்​படையாக கொடுக்​கும் முக்​கி​யத்து​வம், என்னைப் போன்ற​வர்​களுக்கு அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யது. மதுரை​யில் ஜல்லிகட்டுப் போட்​டி​யின்​போது, ஆட்சியரை அலட்​சி​யப்​படுத்​தி​யதைக் கண்டு வருந்​தினேன். வருங்​காலத்​தில் இன்பநி​திக்​காக​வும் பணியாற்ற வேண்​டி​யிருக்​கும்என்று கருதும்​போது வேதனை ஏற்படு​கிறது.

எனவே​தான், கட்சியி​லிருந்து விலகு​வதாக அறிவித்​துள்ளேன். பலரும் அடுத்​தடுத்து ​வில​கு​வார்​கள். குறிப்​பாக, கிராமங்​களில்இருந்து பலர் ​வில​குவர். இவ்​வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x