Published : 25 Jan 2025 06:30 AM
Last Updated : 25 Jan 2025 06:30 AM

கரோனா பேரிடரில் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை: சட்ட போராட்​டக்​குழு வலியுறுத்தல்

சென்னை: கரோனா பேரிடரின்​போது பணியாற்றி தொற்​றால் உயிரிழந்த அரசு மருத்​துவர் விவே​கானந்​தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லினுக்கு அரசு மருத்​துவர்​களுக்கான சட்டப்​போராட்டக் குழு தலைவர் மருத்​துவர் எஸ்.பெரு​மாள்பிள்ளை வலியுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது:கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்​துவர்​களின் குடும்பத்​தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்​டும் என எதிர்க்​கட்​சித் தலைவராக இருந்த​போது மு.க.ஸ்​டா​லின் முந்தைய அரசை வலியுறுத்​தினார். ஆனால் முதல்​வராக பதவி​யேற்ற பிறகு மறைந்த மருத்​துவர்​களின் குடும்பத்​தினருக்கு எந்த நிவாரண​மும் தரவில்லை.

கரோனா பேரிடரில் பணியாற்றி, தொற்​றால் பாதிக்​கப்​பட்டு உயிரிழந்த மருத்​துவர் விவே​கானந்​தனின் மனைவி, அரசு வேலை கேட்டு தன் குழந்தை​களுடன் 3 முறை சுகா​தாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வேண்​டி​னார். ஆனால் எந்த பயனும் இல்லை. மருத்​துவர் விவே​கானந்​தனின் மனைவிக்கு உடனே அரசு வேலை தரப்பட வேண்​டும்என சென்னை உயர் நீதி​மன்றமே அரசுக்கு உத்தர​விட்ட பிறகும் அந்த குடும்பத்​துக்கு நீதி கிடைக்க​வில்லை.

இதற்​கிடையே கடந்த சட்டப்​பேரவை கூட்​டத்​தொடரில், அரசு மருத்​துவர் விவே​கானந்​தனின் மனைவிக்கு அரசு வேலை தரப்பட வேண்​டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அரசை வலியுறுத்தி பேசினார். அப்போது அதற்கு பதிலளித்து அமைச்சர் பேசும்​போது, மறைந்த மருத்​துவர் விவே​கானந்​தனுக்கு 2 மனைவிகள் என்றும், அவரது குடும்பத் தில்பிரச்​சினைகள் இருப்​ப​தாக​வும், அதனால்​தான் அரசு வேலை தர முடிய​வில்லை என்றும் முற்றி​லும் தவறான தகவலை தெரி​வித்​தார். இது வெந்த புண்​ணில் வேல்பாய்ச்​சுவது​போல் உள்ளது.

உயிரிழந்த அரசு மருத்​துவர் விவே​கானந்தன் குடும்பம் படும் வேதனை தமிழக முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​பட​வில்லை என்பது வருத்​தமளிக்​கிறது. நிச்​சயம் இதை முதல்வர் விரும்ப மாட்​டார்​கள். எனவே 26-ம் தேதி குடியரசு தினத்​தன்று அரசு மருத்​துவர்​களின் நலனுக்கான முதல் அறிவிப்​பாக, அரசு மருத்​துவர்​களுக்காக மறைந்த முன்​னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு​வந்த அரசாணை 354-ஐ அமல்​படுத்தி, அதன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்​டும். அதேபோல், அன்றைய ​தினம் மருத்துவர் ​விவே​கானந்​தன் மனை​விக்கு அரசு வேலைக்கான ஆணையை ​முதல்​வர் தன் கைகளால் வழங்க வேண்டு​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x