Published : 22 Jul 2018 08:35 AM
Last Updated : 22 Jul 2018 08:35 AM
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், விவசாய விளைபொருட்களை கட்டணமின்றி அரசு பேருந்து களில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கோயம்பேடு உட்பட பெரிய மார்க்கெட்களுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து வருகிறது. இதனால், வியாபாரிகள், விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ‘‘லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச் செல்ல வேண்டும் என முதல்வரின் அறிவுறுத்தலின்படி.அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என தமிழக அரசு போக்குவரத்து துறை தெரி வித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT