Published : 23 Jan 2025 06:10 AM
Last Updated : 23 Jan 2025 06:10 AM

வானில் ஒரே நேரத்தில் அணிவகுத்த 6 கோள்கள்: அரிய நிகழ்வை சென்னையில் கண்டு ரசித்த பொதுமக்கள்

சென்னை: வானில் ஒரே நேரத்​தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை சென்னை​யில் பொது​மக்கள் ஆச்சரி​யத்துடன் கண்டு ரசித்தனர். சூரியக் குடும்பத்​தில் உள்ள கோள்கள் தங்கள் சுற்று​வட்டப் பாதை​யில் ஒன்றை ஒன்று சந்திக்​கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்​போது ஏற்படு​வதுண்டு.

அதன்படி 6 கோள்கள் ஒரே நேர்​கோட்​டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்​வானது தற்போது அரங்​கேறி வருகிறது. அந்த வகையில் வெள்ளி, வியாழன், சனி, செவ்​வாய், நெப்​டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்​கோட்​டில் தென்​பட்டு வருகின்றன. இவற்றை காண்​ப​தற்காக அறிவியல் அமைப்புகள் சார்​பில் நாடு முழு​வதும் சிறப்பு ஏற்பாடுகள் ஜன.25-ம் தேதி வரை மேற்​கொள்​ளப்​பட்​டுள்ளன.

இதில் வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்​வாய் ஆகிய கோள்​களைப் பார்க்​கலாம். நெப்​டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களை மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்​கி​களால் மட்டுமே காண முடி​யும். இந்நிகழ்வை பொது​மக்கள் பார்​வை​யிடு​வதற்காக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்பமையம் சார்​பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்​யப்​பட்​டிருந்தன.

சென்னை கோட்​டூர்​புரத்​தில் உள்ள பிர்லா மையத்​தில் நேற்று மாலை 6 மணி அளவில் திரண்ட மாணவர்கள் உள்ளிட்ட தரப்​பினர் நேர்​கோட்​டில் இடம்​பெற்றிருந்த கோள்​களைக் கண்டு ரசித்தனர். இவற்றில் வெள்ளி, வியாழன், சனி ஆகிய கோள்களை வெறும் கண்களாலேயே பொது​மக்கள் கண்டறிய ஆய்வாளர்கள் உதவினர்.

இதைத் தொடர்ந்து செவ்​வாய் மாலை நேரத்​தில் மெதுவாக மேலே வரத் தொடங்கிய நிலை​யில், இரவு 9 மணி அளவிலேயே சற்று தெளிவாகக் காண முடிந்​தது. நெப்​டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கி வாயி​லாக​வும் சற்று மங்கலான நிலை​யிலேயே காண முடிந்​ததாக மாணவர்கள் தெரி​வித்​தனர்.

இதற்​கிடையே, அறிவியல் தொழில்​நுட்ப மையத்​தின் செயல் இயக்​குநர் இ.கி.லெனின் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில், ``பிப்​ரவரி மாத தொடக்​கத்​தில் சந்திரன், வியாழன், சனி ஆகிய கோள்கள் ஒரே நேர்​கோட்​டில் வரும். முன்னதாக கடந்த ஜூன் 3-ம் தேதி செவ்​வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள் ஒரே நேர்​கோட்​டில் வந்தன.

இதுபோன்ற கோள்​களின் அணிவகுப்பு (7 கோள்​களின் அணிவகுப்பு) வரும் பிப்​.28-ம் தேதி​யும், ஆக.11-ம் தேதி​யும் (6 கோள்​களின் அணிவகுப்பு) நிகழ​வுள்​ளது. அதன்​பிறகு இது​போன்ற நிகழ்வு 2040-ம் ஆண்டு செப்​டம்​பர் 8-ம் தேதி நடை​பெறும்'' எனத் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x