Published : 21 Jan 2025 06:20 AM
Last Updated : 21 Jan 2025 06:20 AM
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: துணைவேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநில உரிமைகளைக்காக்க வேண்டும் என்பதற்காக பாஜக ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதேவேளையில், சமூகநீதியை காப்பதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ள மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி முதல்வர் ஸ்டாலின் கேட்டறிவாரா. யுஜிசி விதிகளில் ஒரு
வேடம், சாதிவாரி கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா. எப்போது கலையும் இந்த இரட்டை வேடம்? என கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT