Published : 14 Jul 2018 07:23 AM
Last Updated : 14 Jul 2018 07:23 AM

ஆன்லைனில் பதிவேற்றம் செய்த சான்றிதழில் குறைபாடு; குரூப் - 2ஏ தேர்வில் 2,229 பேர் நேரடி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2ஏ தேர்வில் 2,229 விண்ணப்பதாரர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறி வித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 6.8.2017 அன்று நடத்தப்பட்ட குரூப்-2-ஏ (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக கடந்த ஏப்ரல் 23 முதல் மே 9 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட 6,171 பேரின் சான்றிதழ்களை ஆய்வுசெய்ததில் 2,229 பேரின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடியாக டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு அழைத்து அசல் சான்றிதழ்களை சரிபார்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

எனவே, அந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஜூலை 16 முதல் 23 வரை தேர்வாணைய அலுவலகத்துக்கு நேரடியாக வரவேண்டும். இதற் கான அழைப்புக்கடிதம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www. tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x