பொங்கல் பண்டிகை: 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை: 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை எழும்பூர் - மங்களூரு சிறப்பு ரயில் உள்பட 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜன.13) பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் (06037) புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு மங்களூரு சந்திப்பை அடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிகோடு வழியாக மங்களூரு சந்திப்பை சென்றடையும்.

ராமநாதபுரத்தில் இருந்து ஜன.19ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06104) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in